ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பலப்படுத்துவதன் ஊடாகவே சிறுபான்மை தேசிய இனங்களின் இருப்பு பாதுகாக்கப்படும் என்பதோடு அபிலாஷைகளும் பூர்த்தியாகும் என்று முன்னாள் பிரதியமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் தெரிவித்தள்ளதாவது,
தற்போதைய சூழலில் சிறுபான்மை தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம் மலையக மக்களின் இருப்பும், பாதுகாப்பும் மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தக்கூடிய ஒருயொரு தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே காணப்படுகின்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் பழையன கழிந்து புதியன புகுந்துள்ளமையால் புத்தெழுச்சியுடன் இளைய தலைமுறையினர் பலர் அரசியல் பிரவேசம் அடைந்துள்ளார்கள். நீண்ட அனுபவம், அறிவாற்றல் கொண்ட ஒரு தலைமைத்துவத்தின் கீழ் இளைஞர்களின் பிரவேசம் அக்கட்சி எதிர்காலத்தில் இந்த நாட்டிற்க சிறந்த தலைமைத்துவத்தினை வழங்குவதையே கட்டியங்கூறி நிற்கின்றது.
மேலும் இந்த நாட்டில் இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு நிரந்தரமானதும், நியாயமானதுமான தீர்வொன்றை அழிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க என்ற முற்போக்கான, சுயநலனற்ற தலைமையினாலேயே முடியும். பிரஜா உரிமை விடயத்தில் சட்ட திருத்தத்த்தினை மேற்கொண்டு அவ்விடயத்திற்கு நியாயமான முற்றுப்புள்ளி வைப்பதற்கு காரணமாக இருந்தவர் ரணில் விக்கிரமசிங்க ஆகவே அந்தவொரு விடயமே அவருடைய தெளிவான அணுகுமுறைகளை வெளிப்படுத்துவதாக உள்ளது.
எனவே கொழும்பு மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்தவத்தினை ஐ.தே.க.ஊடாக உறுதி செய்யும் அதேநேரம், ரணில் விக்கிரமசிங்கவையும், அவரது அணியையும் வாக்குகளால் பலப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM