அரசாங்கம் தமது பொதுத்தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினரான கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனைப் பயன்படுத்துகின்றமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கண்டனம் வெளியிட்டிருக்கிறார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுத்தேர்தல் பிரசாரக்கூட்டமொன்றில் உரையாற்றிய சம்பிக்க ரணவக்க, கிளிநொச்சியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை கே.பி முன்னெடுத்துச்செல்வது முறையற்றது என்று குறிப்பிட்டார்.
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு இந்தியாவினால் கே.பி மீது சுமத்தப்பட்டிருக்கிறது.
அவ்வாறிருக்கையிலேயே கே.பி யும் விடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான முன்னாள் தளபதி கருணா அம்மான் என்று அழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரனும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்காகத் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுகின்றார்கள் என்று சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார்.
அதுமாத்திரமன்றி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இரகசிய டீல் ஒன்று காணப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர், அவை தொடர்பில் பகிரங்கப்படுத்துவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM