அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ரிக்கி பொண்டிங்கை விட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேந்திர சிங் தோனிதான் சிறந்த அணித்தலைவர் என ஷயிட் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரான ஷயிட் அப்ரிடி டுவிட்டரில் ரசிகர்களுடனான கேள்வி-பதில் உரையாடலின் போது கூறுகையில்,
‘‘அவரிடம் ரசிகர் ஒருவர் பொண்டிங் மற்றும் தோனி இவர்களில் யார் சிறந்த அணித்தலைவர் என கேட்டதற்கு, எனக்கு தெரிந்தவரை தோனிதான் சிறந்த அணித்தலைவர். ஏனென்றால் அவர் இளம் வீரர்கள் அடங்கிய அணியை கட்டமைத்து வழி நடத்தினார்.
ஆனால் பொண்டிங் விடயத்தில் ஸ்டீவ் வோதான் அவுஆஸ்திரேலிய அணியை கட்டமைத்தார். அந்த அணியைத்தான் பொண்டிங் வழி நடத்தினார். அதனால் தோனியா? பொண்டிங்கா? என வரும்போது தோனிதான் சிறந்தவர்’’ என பதிலளித்தார் ஷயிட் அப்ரிடி.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM