ஜனநாயகப் பேராளிகளை குற்றஞ்சாட்டுவது ஏற்புடையது அல்ல - சி.வி.கே.சிவஞானம்

30 Jul, 2020 | 05:31 PM
image

(எம்.நியூட்டன்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் அடையாளப்படுத்தப்பட்டவர்கள் இன்று வெளியேறி கூட்டமைப்பையும் அதனோடு இணைந்து செயற்படுகின்றவர்களையும் கொச்சைப்படுத்துகின்றார்கள்.

இது ஏற்கத்தக்கதலல்ல. தமிழ் மக்கள் இதனைப் புரிந்துகொண்டு தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு தங்கள் பலமான வாக்குகளைச் செலுத்தவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டு வருகின்ற ஜனநாயக் போராளிகள் கட்சியை பல்வேறு விமர்சனங்களை விசமத்தனமாக தெரிவித்து வருகின்றார்கள்.

இது ஏற்புடையது அல்ல. ஆயுதப் பேராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் ஜனநாயக வழியில் திரும்பிய முன்னாள் போராளிகள் இணைந்து ஒரு கட்சியை ஆரம்பித்து செயற்பட்டு வருகின்றார்கள்.

அவ்வாறு செயற்பட்டு வருபவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்து பல செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்கள் கட்சி ஆரம்பிக்கின்றபோது அனைத்துக் கட்சிகளுடனுமே கலந்துரையாடினார்கள். 

அவ்வாறானபோது, கூட்டமைப்பின் செயற்பாடுகளினால் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டு வருகின்றாரகள். இதனைப் பொறுக்காதவர்கள்தான் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைக்கின்றார்கள்.

இவ்வாறு கூறி அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கின்றார்கள். கூட்டமைப்புக்குள் வந்து தங்களின் முகவரியைப் பெற்று விட்டு இன்று வெளியேறி கூட்டமைப்பையும் ஜனநாயகப் போராளிகள் கட்சிகள் மீதும் குறை கூறுகின்றார்கள்.

ஜனநாய பேராளிகள் கட்சி பல்வேறு நிகழ்வுகளை திறம்பட ஒழுங்குபடுத்திச் செய்கின்றார்கள். அந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு விட்டு தேர்தல் என்றவுடன் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள். 

அரசியல் தேவைக்காக பொய்ப்பிரச்சாரங்கள் செய்யக்கூடாது, போராளிகளின் தியாகங்களை கொச்சைப்படுத்தக் கூடாது.

எனவே, மக்கள் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு தங்கள் பலத்தை வழங்கி ஒருமித்த குரலாக செயற்பட ஆணை வழங்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை அரசாங்கம் காற்றாலை மின் உற்பத்தி...

2025-01-24 17:29:17
news-image

மோட்டார் சைக்கிள்களில் போதைப்பொருள் விற்பனை ;...

2025-01-24 17:01:16
news-image

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின்...

2025-01-24 17:08:17
news-image

மஹரகம ரயில் நிலையத்திற்கு அருகில் ஹெரோயினுடன்...

2025-01-24 16:26:51
news-image

பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது - அடிப்படை உரிமை...

2025-01-24 16:17:44
news-image

இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு...

2025-01-24 16:20:00
news-image

“சீமான் பிரபாகரனை சந்தித்தது உண்மை தான்....

2025-01-24 15:58:31
news-image

காலி சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதி ;...

2025-01-24 15:20:43
news-image

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: அதிகூடிய...

2025-01-24 15:28:45
news-image

வவுனியாவில் 128 கிலோ மாட்டிறைச்சியுடன் வாகனம்...

2025-01-24 15:15:39
news-image

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி யானை குட்டி...

2025-01-24 15:00:43
news-image

உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த யாழ். பல்கலை...

2025-01-24 15:00:26