(எம்.மனோசித்ரா)
இலங்கையின் பொருளாதாரத்தை மீள்சீரமைக்க தேவையான 6 ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ளும் திட்டங்கள் அரசாங்கத்திடம் கிடையாது.
கடனாக பெற்றுக்கொண்டாலும் அரசின் பொருளாதார மற்றும் நிதி நிர்வாகத்தின் இயலாமையினால் மற்றுமொரு நெருக்கடியை நோக்கியே நாடு செல்லும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
எவ்வாறாயினும் தேரத்லொன்றை அருகில் வைத்துக் கொண்டு நாட்டிற்காக எமது திட்டங்களையே நாம் முன்வைக்க வேண்டும். இதனை தெளிவாக கூறும் போது அதற்குறிய பலன்கள் மக்கள் எமக்களிப்பார்கள் எனவும் குறிப்பிட்டார்.
ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தின் இன்று கட்சி உறுப்பினர்களை முற்பகல் சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,
நாட்டில் 10 இலட்சம் தொழில் வாய்ப்புகள் பாதிப்படைந்துள்ளன. நாள் உழைப்பை நம்பி வாழ்ந்த மக்களின் நிலை மிகவும் மோசமானதாகவே அமைந்துள்ளது.
உழைக்கும் மக்களுக்கு முழு ஊதியமும் வழங்கப்படுவதில்லை . அரைவாசியையே வழங்குகின்றனர். இந்த நிலைமையை மாற்ற வேண்டுமாயின் இலங்கைக்கு 6 ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகிறது. ஆனால் அத்தொகையை பெற்றுக்கொள்ளும் திட்டங்கள் அரசாங்கத்திடம் கிடையாது. கடனை பெற்றுக் கொண்டாலும் பொருளாதார மற்றும் நிதி நிர்வாகத்தின் அரசின் இயலாமை வெளிப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM