இராணுவத் தளபதியுமான லெப்டிணன் ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திலுள்ள ஓய்வு பெற்ற தமிழ் இராணுவ சிப்பாய்களை சந்தித்து கலந்துரையாடியதோடு அவர்களது பிரச்சினைகள் பற்றியும் கேட்டறிந்துள்ளார்.
யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரியவினால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சந்திப்பின் போது குறித்த முன்னாள் சிப்பாய்களின் குறை நிறைகள் சுகாதார நிலைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
இதன்போது பிரதான பிரச்சினையாக காணப்பட்ட மாதாந்த மருந்துக்களை பெற்றுக் கொள்ளலின் தீர்வாக மாதத்திற்குரிய மருந்துக்களை அவர்களது வீடுகளுக்கே கிடைக்கச் செய்வதென்பதும் அவர்களின் அவசர வைத்திய தேவைகளின் போது சிகிச்சைக்கான போக்குவரத்து வசதிகள் மற்றும் இதர வசதிகளை செய்து கொடுக்குமாறு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு பணிப்புரை வழங்கப்பட்டது.
மேலும் ஓய்வு பெற்ற படைச்சிப்பாய்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் கொவிட் 19 கட்டுப்படுத்தலில் இராணுவத் தளபதியின் பங்களிப்பிற்கு நன்றி தெரிவித்தனர். இராணுவத் தளபதி லெப்டிணன் ஜெனரல் சவேந்திர சில்வா யாழ் மக்களின் அத்தியவசிய தேவைகளை நிறைவு செய்வதற்காக வடக்கிலிருக்கும் இராணுவத்தினர் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் சமூக நலத் திட்டங்கள் மற்றும் இடர் காலங்களின் இராணுவத்தின் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM