வாக்காளர் அட்டை விநியோகம் நாளையுடன் நிறைவு

Published By: Digital Desk 3

28 Jul, 2020 | 05:28 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை வீடுகளுக்கு சென்று விநியோகிக்கும் நடவடிக்கை நாளையுடன் நிறைவடைகின்றது என பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான வாக்காளர் அட்டைகளை உரியவர்களுக்கு தபால் மூலம் விநியோகிக்கும் நடவடிக்கை தொடர்பாக தெரிவிக்கையலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வமான வாக்காளர் அட்டைகளை தபால் மூலம் விநியோகிக்கும் நடவடிக்கை கடந்த மாதம் இறுதியில் ஆரம்பிக்கப்பட்டது. தபால் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்ற ஒருகோடி 63 இலட்சம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளன. அது 96 சதவீதமாகும்.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தபால் திணைக்களத்துக்கு மொத்தமாக ஒரு கோடி 69 இலட்சம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன. அதன் பிரகாரம் சுமார் 1.5 வீதமான  உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படாமல் இருக்கின்றன.

அவை வாக்காளர்களின் பிரதேசங்களில் அமைந்திருக்கும் தபால் நிலையங்களில் இருந்து எதிர்வரும் 5 ஆம் திகதிவரை உரிய அடையாளத்தை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் வேட்பாளர்களினால் தனிப்பட்ட ரீதியில் வாக்காளர்களுக்கு அனுப்பப்படும்  தேர்தல் பிரசார பத்திரங்களை விநியோகிக்கும் நடவடிக்கை நாளை 30 ஆம் திகதியுடன் நிறுத்தப்படும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிக்கடுவை கடலில் மூழ்கிய வெளிநாட்டுப் பெண்...

2025-02-08 12:26:54
news-image

12 பிரதி பொலிஸ் மா அதிபர்கள்,...

2025-02-08 12:18:00
news-image

சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

2025-02-08 11:58:07
news-image

குருணாகலில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது...

2025-02-08 12:12:59
news-image

வத்தளையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது...

2025-02-08 12:09:11
news-image

திருகோணமலை – கொழும்பு பகல்நேர ரயில்...

2025-02-08 11:55:17
news-image

நாரங்கல பகுதியில் புதையல் தோண்டிய நால்வர்...

2025-02-08 11:51:45
news-image

கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி...

2025-02-08 11:28:56
news-image

மாத்தறையில் கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

2025-02-08 11:19:51
news-image

யாழ். கட்டைக்காடு கடற்கரையில் கொக்கெய்ன் போதைப்பொருள்...

2025-02-08 11:02:22
news-image

முல்லைத்தீவில் பஸ் சாரதி மீது வாள்வெட்டுத்...

2025-02-08 09:59:53
news-image

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் உயர்தர மாணவன்...

2025-02-08 09:57:57