சலுகைக் கடன்களை பெற்று தருவதாக கூறி, நிதி மோசடியில் ஈடுபட்ட ஐவர் கைது

Published By: J.G.Stephan

27 Jul, 2020 | 12:04 PM
image

(செ.தேன்மொழி)

இணையம் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்தி வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு சலுகைக் கடன்களை பெற்று தருவதாக குறிப்பிட்டு நிதி மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருலப்பனை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளின் அடிப்படையிலேயே நேற்று ஞாயிற்றுக் கிழமை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேக நபர்கள் இணையம் ஊடாக சலுகை அடிப்படையில் கடன் பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்து , வெளிநாட்டில் தொழில் புரிந்து வரும் நபர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடியுள்ளனர். பின்னர் அவர்களுக்கு இலங்கையில் காணப்படும் வங்கி கணக்குகளின் விபரங்கள் தொடர்பில் அறிந்துக் கொண்டு, அந்த கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்தை மோசடியான முறையில் கொள்ளையிட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு 5 இலட்சம் ரூபாய் பணத்தை சந்தேக நபர்கள் மோசடி செய்துள்ளதாக பெண்ணொருவர் கிருளப்பனை பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார். அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை இவர்கள் போலி ஆவணங்கள் மற்றும் சாரதி அனுமதி பத்திரங்களையும் தயாரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பிடபெத்தர - நாரஹேன்பிட்டி மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30 - 46 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து மடிக்கணணி , வங்கி அட்டை, 925 சாரதி அனுமதி பத்திரம் தயாரிக்க பயன்படுத்தும் அட்டைகள், இரு இறப்பர் முத்திரைகள் ,61 போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள், 5 சர்வதேச ரீதியிலான சாரதி அனுமதிப்பத்திரங்கள் உட்பட பல பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக கார் , வேனையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிருளபனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55