இரவு நேர களியாட்ட விடுதிகளை மையப்படுத்தி சட்டவிரோத நடவடிக்கையை முன்னெடுத்த கும்பல் ; சிறைச்சாலையிலிருந்து நெறிப்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கை - வெளியான அதிர்ச்சித் தகவல் 

27 Jul, 2020 | 07:09 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

சுமார் 28 மில்லியன் ரூபா வரை பெறுமதிமிக்கதாக கருதப்படும் 5600 போதை மாத்திரைகளுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பிலுள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில்  தங்கியிருந்தவாறு,  நட்சத்திர ஹோட்டல்களில் இடம்பெறும் களியாட்ட நிக்ழ்வுகள், இரவு நேர களியாட்ட வைபவங்களை மையப்படுத்தி இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய சட்ட விரோத போதை மாத்திரை விற்பனை வலையமைப்பின் இரு சந்தேக நபர்களே இவ்வாரு கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பு மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவினர் முன்னெடுத்த விஷேட நடவடிக்கைகளில் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், சந்தேக நபர்களிடமிருந்து 5,600 போதை மாத்திரைகளுக்கு மேலதிகமாக  2400 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்,  20 மற்றும் 29 வயதுகளையுடைய  மாபோல - வத்தளை மற்றும் அங்கொடை - கொத்தடுவ பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

கொழும்பு மத்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த டி சொய்ஸாவின் நெறிப்படுத்தலில் இயங்கும், கொழும்பு மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அறை பதிவு செய்து தங்கியிருந்த இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஹோட்டலுக்கு வெளியே,  அந்த ஹோட்டலை அண்மித்த பகுதியில் வைத்து ஒருவர் முதலில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் இருந்து 2400 மில்லிகிராம் ஹெரோயினும் 5500 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டதாக கோட்டை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த டி சொய்ஸாவுடன் பங்கேற்ற பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.

அந்த சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலேயே, நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த நபர் ஒருவர் 100 போதை மாத்திரைகளுடன் மீட்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். அதன்படியே மொத்தமாக 5600 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

இவை நட்சத்திர ஹோட்டல்களிலும் அதனை அண்மித்த பகுதிகலிலும் இடம்பெறும் களியாட்ட நிகழ்வுகள், இரவு நேர களியாட்ட விடுதிகள் போன்றவற்றை இலக்கு வைத்து இடம்பெறும் சட்ட விரோத வர்த்தகம் என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதில் ஒரு மாத்திரை 2500 ரூபா முதல் 5000 ரூபாவரையிலான விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடம் முன்னெடுத்த விசாரணைகளில், இந்த  போதை மாத்திரைகள்,  தற்போது சிறைச்சாலையில் உள்ள ஒருவர் ஊடாகவே வெளிநாட்டிலிருந்து கூரியர் சேவை ஊடாக வரவழைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந் நிலையில் சிறையில் உள்ள குறித்த நபருக்கு மேலதிகமாக, கூரியர் சேவை ஊடாக அதனை அனுப்பி வைத்ததாக கருதப்படும் வெளிநாட்டில் உள்ள வெளிநாட்டு பிரஜை ஒருவர் தொடர்பிலும் இந்த விசரணைகளில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபரின்  அலோசனைகளையும் பெற்றுக்கொண்டு, இதற்கு தேவையான மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸ் பேச்சாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.

ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்து இவ்வாறான சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதன் ஊடாக பொலிஸாரின் கண்ணில் மண்ணை தூவலாம் என சந்தேக நபர்கள் அல்லது குற்றங்களில் ஈடுபடுவோர் நினைத்தாலும்,  தற்போது அது தொடர்பில் பொலிஸார் விளிப்பான நிலையிலேயே உள்ளதாகவும் அதனாலேயே இந்த போதை மாத்திரை வலையமைப்பை கைது செய்ய முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44