முன்பள்ளி ஆசிரியர்களின் நியமன விவகாரம்  

Published By: Priyatharshan

26 Jul, 2020 | 10:29 AM
image

எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் சிறு பிள்ளைகளுக்கு கல்வி போதிப்பவர்கள் முன்பள்ளி ஆசிரியர்கள், உண்மையிலேயே முன்பள்ளி ஆசிரியர்களின் பணி மிகவும் மகத்துவம் வாய்ந்ததாகும்.

குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வியை ஊட்டுவதும் அவர்களை நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் ஆக்குவதும் முன்பள்ளி ஆசிரியர்களின் கரங்களிலேயே தங்கியுள்ளது.

அதுமாத்திரமன்றி குழந்தைகளுக்கு கல்வி போதிக்க மிகுந்த பொறுமையும் அவசியமாகும் . இவ்வாறான பின்னணியில் கல்வி போதிக்கும் முன்பள்ளி ஆசிரியர்கள் பலருக்கு மாதாந்த வேதனம் கிடைப்பதில்லை. அவ்வாறு வேதனம் கிடைத்தாலும் ஒரு சிறு தொகையே வழங்கப்படுகின்றது.

மேலும் பலர் வேதனமே இன்றி வருடக்கணக்கில் சேவை அடிப்படையில் கல்வி போதித்து வருகின்றனர். இவர்களுக்கும் அரச துறையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். உரிய வேதனம் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் விடப்பட்டு வருகின்ற போதிலும், அவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை .

இந்நிலையில் இதனையோர் அரசாங்க சேவையாகக் கருதி, முன்பள்ளி ஆசிரியர்களின் தரங்களை பரிசீலித்து, அவர்களுக்கு பயிற்சி அளித்து, உரிய வேதனங்கள் வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது .

 இதேவேளை, முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு ஒன்றை வழங்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பிள்ளைகளின் வாழ்க்கையில் ஒரு தீர்க்கமான காலகட்டமாக இருக்கும் முன்பராயக் கல்வி, ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமத்துடனும் தரத்துடனும் திட்டமிடப்படுவது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும் புதிய அரசு அமைக்கப்பட்ட பின்னர் இதனை முக்கிய விடயமாகக் கருதி , முன்பள்ளி பாடசாலை முறைமையை அமைச்சு ஒன்றின் கீழ் கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

உண்மையில் அவ்வாறு நடைபெறுமானால் அது மிகவும் வரவேற்கத்தக்கதாகவே அமையும் , தொட்டில் பழக்கமே சுடுகாடு வரை என்பது போன்று, குழந்தைகளுக்கு சிறந்த கல்வியையும் பழக்கவழக்கங்களையும் சிறுபராயத்திலேயே ஊட்டுவது இன்றியமையாதது. இந்தப் பின்னணியில் முன்பள்ளி ஆசிரியர்களின் பணி கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழ்க் கனடியர் கரி...

2025-03-20 17:41:32
news-image

சொந்தக்காலில் நிற்கும் முயற்சி?

2025-03-20 17:41:10
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மைய அரங்கிற்கு...

2025-03-20 17:24:35
news-image

சகல கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்படும் ;...

2025-03-20 14:06:08
news-image

பட்டலந்த குறித்து பேசினால் தான் சிங்கள...

2025-03-18 20:17:35
news-image

'நாடாளுமன்றத்தில் ஐக்கியப்படுவதை தவிர இலங்கையின் தமிழ்...

2025-03-18 12:15:30
news-image

அல் ஜசீராவிடமிருந்து உள்நாட்டு அரசியல்வாதிகளுக்கு ஒரு...

2025-03-19 14:50:58
news-image

பெண்களை அச்சுறுத்தும் "மாதவிடாய் வறுமை"

2025-03-18 04:17:11
news-image

IMFஇன் சமூக பாதுகாப்பு செயற்றிட்டங்கள் தொடர்பான...

2025-03-17 22:45:03
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் சந்திப்புகள்- கலந்தாலோசனைகள்...

2025-03-17 16:13:28
news-image

பெண்கள் மீதான அரசியல் அவதூறுகளும் சவால்களும்

2025-03-17 10:28:59
news-image

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண உள்ளூராட்சி...

2025-03-16 15:31:15