இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங், இலங்கை கடற்படையின் 24 ஆவது தளபதியாக நியமிக்கப்பட்ட வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவுக்கு தொலைபேசியில் தொடர்பினை மேற்கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய கடற்படைத் தளபதி, இரண்டு கடற்படைகளுக்கிடையிலான உறவு தொடர்ந்து வலுவாக வளரும் என்றும், இலங்கை கடற்படையின் திறன்களை வலுப்படுத்த எந்தவொரு உதவியையும் வழங்க இந்திய கடற்படை தயாராக உள்ளது என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.
இலங்கை கடற்படை இந்திய கடற்படையுடன் நீண்டகால உறவைக் கொண்டுள்ளது, மேலும் இரு கடற்படைகளும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பிற்கான பங்குதாரர்களாக நலன்களைப் பகிர்ந்து கொண்டுள்ளன.
இந்திய கடற்படைத் தளபதியின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்ட வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, பல ஆண்டுகளாக இலங்கை கடற்படை அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கு பயிற்சி வாய்ப்புகளை வழங்கிய இந்திய கடற்படைக்கு தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM