சரணடைந்த சிறைச்சாலை அதிகாரிக்கு புதன்கிழமை வரை விளக்கமறியல்

Published By: Digital Desk 3

25 Jul, 2020 | 04:13 PM
image

(செ.தேன்மொழி)

நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நீர்  கொழும்பு சிறைச்சாலையின் அதிகாரி குற்றுப் புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்ததையடுத்து எதிர்வரும் புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையின் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைய நீர்கொழும்பு சிறைச்சாலையின் அதிகாரியான பிரசாத் காலிங்க கலுவக்கல என்பவருக்கு நீதி மன்றம் பிடியானை பிறப்பித்திருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பில் நீர் கொழும்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் அனுருத்த , பிரதான சிறைச்சாலை அதிகாரி உபாலி சரத் பண்டார மற்றும் பதில் சிறைச்சாலை அதிகாரி நிசாந்த சேனாரத்ன ஆகியோருக்கு எதிராகவும் பிடியானை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரசாத் காலிங்க கலுவக்கல அதிகாரி நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்துள்ளதுடன், அத்தியட்சகர் அனுருத்த தனக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள பிடியாணை உத்தரவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று சனிக்கிழமை சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளதுடன் , இதன்போது நீதிவாள் அவரை எதிர்வரும் புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம்...

2025-03-17 22:16:32
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான...

2025-03-17 22:07:08
news-image

மகர சிறைச்சாலையில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை ,...

2025-03-17 22:10:24
news-image

சிறுவயது திருமணம் அனைத்து இனத்தவர்களிலும் பொதுப்...

2025-03-17 22:18:12
news-image

தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி...

2025-03-17 22:20:00
news-image

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச்...

2025-03-17 22:35:48
news-image

வடக்கு, கிழக்கிலுள்ள வரலாற்று தொன்மையான ஆலயங்களை...

2025-03-17 22:14:30
news-image

பரீட்சைகள் திணைக்களம் ஊடாக அரபுக்கல்லூரிகளில் நடத்தப்படும்...

2025-03-17 22:05:15
news-image

கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் எரான்...

2025-03-17 21:57:02
news-image

முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் ;...

2025-03-17 21:59:17
news-image

யாழ்.தையிட்டி விகாரையை அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக...

2025-03-17 15:22:29
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் கூரிய ஆயுதத்தால்...

2025-03-17 21:38:50