நீராவியடிப் பிள்ளையார் ஆலய பொங்கல் விழாவில் பொலிஸார் இடையூறு 

Published By: Digital Desk 4

23 Jul, 2020 | 09:15 PM
image

சர்சைக்குரிய பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் நாளை இடம்பெறவுள்ள நிலையில் பொலிஸாரால் இடையூறுகள் ஏற்படுத்தபட்டுள்ளன.

இந்நிலையில் கோவில் நிர்வாகத்தினர் மற்றும், ஊர் மக்கள் இணைந்து, குறித்த பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளில் (23.07) இன்றைய தினம் ஈடுபட்டிருந்தனர்.

குறிப்பாக நாளை (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ள பொங்கல் நிகழ்வுக்காக கோவில் நிர்வாகத்தினர், கோவில் சூழலில் தகரப் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது குறித்த இடத்திற்கு அதிகளவான ஆயுதம் தாங்கிய விசேட அதிரடிப்படையினர், மற்றும் பொலிஸார் சென்றுள்ளனர்.

அத்தோடு அங்கு சென்ற பொலிஸார் கோவில் சூழலில் தகரப் பந்தல் அமைக்கக்கூடா தெனத் தடைவிதித்திருந்தனர்.

இந் நிலையில் நீராவியடி பிள்ளையார் ஆலய  நிர்வாகத்தினரால்  கோவிலில் இடம்பெறவுள்ள வருடாந்த பொங்கல் விழா தொடர்பில் பொலிஸாருக்கு  நிலைமைகள் தெளிவுபடுத்தப்பட்டது.

இருப்பினும் பொலிஸார் கோவில் சூழலில் தகரப் பந்தல் அமைக்கக் கூடாதெனத் தொடர்ந்தும் கோவில் நிர்வாகத்தினரைத் தடுத்தனர்.

இந் நிலையில் பொலிஸாரின் இடையூறுகளுக்கு மத்தியிலும் கோவில் நிர்வாகதினர் பந்தல் அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

தொடர்ந்தும் பொலிஸார் பந்தல் அமைப்பதற்கு தடை விதித்த நிலையில் , முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரவிகரன்  மற்றும் கோவில் நிர்வாகத்தினர் ஆகியோர், தகரப்பந்தலை கோவில் சூழலில் அமைக்கக்கூடாதென்றால், அவ் அறிவித்தலை எழுத்துமூலம் தருமாறு பொலிஸாரிடம் கோரியிருந்தனர்.

இதனையடுத்து பொலிஸார் கோவில் வளாகத்தில் பந்தலை அமைக்குமாறு கூறி அங்கிருந்து விலகிச் சென்றிருந்தனர்.

குறித்த நீராவியடிப் பிள்ளையார் கோவில்ச் சூழலில் குடியிருக்கின்ற பௌத்த பிக்குவின் தூண்டுதலிலேதான் பொலிஸார் தம்மை கோவில் சூழலில் பந்தல் அமைக்கக்கூடாதெனத் தடுத்ததாகவும், பொலிஸார் பக்கச்சார்பாக நடந்துகொண்டதாகவும் கோவில் நிர்வாகத்தினர் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தனர்.

அதேவேளை நீதிமன்றத் தீர்ப்பிற்கு முரணாக தாம் நடந்துகொள்ளவில்லை எனவும், நாளை இடம்பெறவிருக்கின்ற பொங்கல் நிகழ்விற்காகத் தற்காலிகமாகவே தாம் தகரப்பந்தல் அமைத்ததாகவும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

ஆனால் கோவில் சூழலில் குடியிருக்கின்ற பௌத்த பிக்கு, நீதிமன்றத் தீர்ப்பினை மீறி கோவில் சூழலில் நீர்த்தாங்கி ஒன்றினை நிர்மானித்துள்ளதுடன், அங்கு பௌத்தக் கொடிகளைப் பறக்கவிட்டுள்ளதாகவும், ஆகவே நீதிமன்றத் தீர்ப்பை மீறி பௌத்த பிக்கு செய்யும் செயற்பாடுகளுக்காக தாம் விரைவில் நீதிமன்றத்தினை நாடவுள்ளதாகவும் கோவில் நிர்வாகத்தினர் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய தபால் சேவை பரிமாற்று நிலையத்தில்...

2025-03-21 21:21:14
news-image

இலங்கைக்கு வருகிறார் இந்திய பிரதமர் மோடி;...

2025-03-21 20:22:45
news-image

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

2025-03-21 20:05:38
news-image

வெளிவிவகார அமைச்சர் மெளனமாக இருக்காது இஸ்ரேல்...

2025-03-21 16:34:59
news-image

யாழ். ஜனாதிபதி மாளிகையை வருமானம் ஈட்டும்...

2025-03-21 19:56:10
news-image

அமெரிக்க இந்தோ - பசுபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-21 18:16:14
news-image

யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம்

2025-03-21 16:42:33
news-image

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ...

2025-03-21 17:16:03
news-image

பொலன்னறுவையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட...

2025-03-21 16:32:43
news-image

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு...

2025-03-21 17:05:15
news-image

உலக வங்கியின் பூகோள டிஜிட்டல் மாநாட்டில்...

2025-03-21 17:09:26
news-image

161 ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல்

2025-03-21 16:45:59