விசேட சுற்றிவளைப்பு 90,862 பேர் கைது

Published By: Digital Desk 3

23 Jul, 2020 | 03:18 PM
image

(செ.தேன்மொழி)

நாடளாவிய ரீதியில் கடந்த 47 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த விசேட சுற்றிவளைப்பின் போது பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் 90 ஆயிரத்து 862 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

திட்டமிட்ட குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் , பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசேட சுற்றிவளைப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதற்கமைய கடந்த மாதம் 6 ஆம் திகதி சனிக்கிழமை காலை ஆறு மணிமுதல் இன்று வியாழக்கிழமை காலை ஆறு மணிவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோத ஆயுதங்கள் , போதைப் பொருட்கள் , சட்டவிரோத மதுபானம் வைத்திருந்தமை தொடர்பிலும், பிடியாணை உத்தரவு வழங்கப்பட்டிருந்தவர்கள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடையதாக கூறப்படும் நபர்களே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது போதைப் பொருள் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 20 ஆயிரத்து 371 சந்தேக நபர்களுள் 11 ஆயிரத்து 480 சந்தேக நபர்கள் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 14 கிலோ 682 கிராம் 600 மில்லி கிராம் தொகை ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கஞ்சா போதைப் பொருளுடன் 8229 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவர்களிடமிருந்து 695 கிலோ 252 கிராம் 253 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை ஐஸ் போதைப் பொருளுடனும் 662 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 4 கிலோ 622 கிராம் 221 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மதுபானம் தொடர்பில் இடம்பெற்ற சுற்றிவளைப்புகளில் 19 ஆயிரத்து 107 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களிடமிருந்து 5 இலட்சத்து 716 லீட்டர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை சட்டவிரோதமான முறையில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்தமை தொடர்பில் 202 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ,ஆயுதங்கள் வைத்திருந்ததாக 184 பேரும் , வெடிமருந்துகளை வைத்திருந்ததாக 18 பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 51 குழல் 12 ரக துப்பாக்கிகளும் , 29 உள்நாட்டு துப்பாக்கிகளும் , 92 ரிபிடர் ரக துப்பாக்கிகளும், 2 வேறுவகை துப்பாக்கிகளும், 5 கைத்துப்பாக்கிகளும் , 13 ரி 56 ரக துப்பாக்கிகளும் , ரி 81 ரக துப்பாக்கி ஒன்றும் , ரிவோல்டர் ரக துப்பாக்கிகள் இரண்டும் ,  1749 தன்னியக்க தோட்டாக்களும் மற்றும் 11 வாள்களும் , 7 கத்திகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை  367 கிராம் தொகை வெடி மருந்து , 28 டெட்டனேட்டர்கள் மற்றும் 30 கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 17,913 சந்தேக நபர்களும்,  வேறுவகையான குற்றச்செயல்களை புரிந்த 33,269 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதன் நோக்கிலே பொலிஸார் இந்த விசேட சுற்றிவளைப்பை முன்னெடுத்து வருகின்றனர். அதற்கமைய கடந்த 47 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சுற்றிவளைப்புகளின் போது  90 ஆயிரத்து 862 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08