இரட்டை வேடம் போடுபவர்களுக்கு மக்கள் ஆதரவு வழங்க மாட்டார்கள் - பிரதமர் மஹிந்த

22 Jul, 2020 | 08:54 PM
image

(இராஜதுரை ஹஷான்)

வடக்கிற்கு ஒன்றையும், தெற்கிற்கு பிறிதொன்னையும் ஒருபோதும் கூற மாட்டேன். அரசியலமைப்பின் 13வது திருத்தம்  தொடர்பில்   ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ யாழ்ப்பாணத்தில் குறிப்பிட்ட விடயத்தை தெற்கில் மாற்றி  குறிப்பிட்டுள்ளார். இரட்டை வேடம் போடுபவர்களுக்கு மக்கள் ஆதரவு  வழங்க மாட்டார்கள். என  பிரதமர்  மஹிந்த  ராஜபக்ஷ  தெரிவித்தார்.

    ஹோமாகம  நகரில் இன்று புதன்கிழமை இடம் பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல்  பிரசாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில்   பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பல்வேறு  சவால்களுக்கு மத்தியில் 2004ம் ஆண்டு ஆட்சி பொறுப்பினை ஏற்றேன். குறுகிய  காலத்தில் 30 வருடகால சிவில் யுத்தம்    முடிவிற்கு கொண்டு வரப்பட்டது.  நாட்டின் அபிவிருததி பணிகள்  வடக்கு தெற்கு வேறுபாடின்றி துரிதமாக முன்னெடுக்கப்பட்டன.    ஆனால் 2015ம் ஆண்டு  ஆட்சி மாற்றத்தின் பின்னர்  அபிவிருத்தி பணிகள் அரசியல்  பழிவாங்களுக்காக  இடை நிறுத்தப்பட்டது.

  தேசிய  வளங்களை  விற்பதில்  ஐக்கிய தேசிய  கட்சி அரசாங்கம் அதிக கவனம்  செலுத்தியது. அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்டது.   மத்தளை  விமான நிலையம் இத்தியாவிற்கு வழங்குவதாற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்நிய பிரதமருடன்  பேச்சுவார்த்தையினை முன்னெடுத்து   மத்தளை விமான நிலைய   விவகாரத்தை திருத்திக் கொண்டோம்.

  கடந்த அரசாங்கத்தில்  ஜனாதிபதி  சிறிசேனவிற்கும்,  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான முரண்பாடு  முழு அரச நிர்வாகத்தையும் பலவீனப்படுத்தியது. இதன் விளைவை மக்கள் எதிர்க் கொண்டார்கள்.  இந்நிலைமை மீண்டும் தோற்றம் பெற கூடாது.   ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்கை பாராளுமன்றத்தின்  ஊடாகவே  செயற்படுத்தப்பட வேண்டும். அதற்கு  அவர் பிரதிநிதித்துவப்படுத்தும்  கட்சி  அரசாங்கத்தை அமைக்க வேண்டும்.  ஜனாதிபதியுடன் எம்மால் (பொதுஜன பெரமுன) மாத்திரமே  . இணக்கமாக செயற்பட  முடியும்.

ஐக்கிய மக்கள் சக்தியின்  தலைவர் சஜித் பிரேமதாஸ அரசியலமைப்பின் 13வது திருத்தம் தொடர்பில்   யாழ்ப்பணத்தில்   குறிப்பிட்ட விடயத்தை தெற்கில் மாற்றியமைத்துள்ளார். அரசியல் தேவைகளுக்காக இரட்டை வேடம் போடுபவர்களை  மக்கள் ஆதரிக்கமாட்டார்கள்.  வடக்கிற்கு ஒன்றையும்  தெற்கிற்கு பிறிதொன்றையும் ஒருபோதும் குறிப்பிடமாட்டேன். என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா பொது வைத்தியசாலையில் பன்முக மருத்துவக்...

2026-05-21 15:55:37
news-image

காஸா நோக்கிய மனிதாபிமான கப்பல் பேரணி:...

2026-05-21 15:42:44
news-image

கைத்தொலைபேசி தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் என்ன...

2026-05-21 15:52:10
news-image

பாலியல் துஷ்பிரயோக வழக்கு : வன்கொடுமைக்கு...

2026-05-21 15:44:28
news-image

எபொல்லா வைரஸ் தொற்று ; விமான...

2026-05-21 15:07:23
news-image

மட்டு.ஏறாவூரில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த பழமையான துப்பாக்கி,...

2026-05-21 15:02:19
news-image

ஸ்ரீபாத யாத்திரை பருவத்தின் போது இதுவரை...

2026-05-21 15:00:40
news-image

தலசீமியா நோய் கட்டுப்பாடு மற்றும் நோயாளர்...

2026-05-21 14:38:31
news-image

பல்லேகம ஹேமரத்தின தேரருக்கு எதிரான வழக்கு...

2026-05-21 14:21:34
news-image

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விஜயத்தை சிறப்பாக...

2026-05-21 14:22:50
news-image

போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு 07 வருட...

2026-05-21 14:26:59
news-image

வெளியக காரணிகளால்தான் டொலரின் பெறுமதி உயர்கிறது...

2026-05-21 14:16:58