உடற்பருமனுக்காக மேற்கொள்ளப்படும் சத்திர சிகிச்சைக்குப் பின்னரான பக்க விளைவுகள், பெண்களைவிட ஆண்களுக்கே அதிக அளவில் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
இன்றைய திகதியில் வேகமான வாழ்க்கை நடைமுறை மாற்றத்தால் எம்மில் பலரும் தங்களது உணவு முறை பழக்க வழக்கங்களை மாற்றி அமைத்துக் கொண்டனர். இதன் காரணமாக ஏராளமானவர்கள் உலக சுகாதார ஸ்தாபனம் நிர்ணயித்த அளவை விட கூடுதலான உடல் எடையுடன் இருக்கிறார்கள்.
இந்த கொரோனா காலகட்டத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருப்பதால், அவர்கள் கூடுதலாக உணவருந்தி, உடல் எடையை பராமரிக்க இயலாமல், உடற்பருமன் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள்.
உடல் பருமனைக் குறைப்பதற்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பல்வேறு உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி க்கு பின்னரும், உடல் எடை குறையாதவர்களுக்கு பேரியாட்ரிக் சத்திர சிகிச்சை செய்து கொள்ளுமாறு பரிந்துரைக்க படுகிறார்கள். பல கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு உடல் பருமன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு sleeve gastrectomy மற்றும் laparoscopic gastric bypass ஆகிய சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டு உடல் எடையைக் குறைக்கிறார்கள்.
இத்தகைய சத்திரசிகிச்சை செய்துகொண்டவர்களில் பலருக்கும் சத்திர சிகிச்சைக்கு பின்னரான பக்கவிளைவுகளை குறைப்பதற்கான சிகிச்சைகளையும், மருத்துவரின் கண்காணிப்பில் தொடர்ச்சியாக 30 நாட்கள் வரை மேற்கொள்வார்கள். இதன்போது அண்மைய ஆய்வின்படி பெண்களைவிட ஆண்கள் கூடுதலாக 20 சதவீத அளவிற்கு பக்க விளைவுகளால் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டிருக்கிறது.
இதனால் உடல் பருமனுக்கான பிரத்யேக பேரியாட்ரிக் சத்திர சிகிச்சை செய்து கொண்டவர்கள்பக்கவிளைவு தொடர்பான மருத்துவர்கள் கூறும் அறிவுரையை உறுதியாக பின்பற்ற வேண்டும். சிக்கல்களை ஏற்படுத்திக் கொள்ளாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். இதனை அலட்சியப்படுத்தினால் மரணம் ஏற்படுவதற்கான அபாயமும் உண்டு என எச்சரிக்கிறார்கள்.
டொக்டர் மாறன்.
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM