புத்தளம் சாலியாவெவ புளியங்குளம் பகுதியில் மாணவர் ஒருவர் நேற்று (20) காலை நீர் நிறைந்த குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக சாலியாவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் சாலியாவெவ, இஹல புளியங்குளம், மஹாகமவில் வசிக்கும் 17 வயதுடைய மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நிலக்கடலை தோட்டதை யானைகளிடமிருந்து பாதுகாக்கச் சென்ற தனது தாத்தா மற்றும் மாமா ஆகியோருடன் குறித்த மாணவனும் சென்றுள்ளார் எனவும் அதன்போது அங்கிருந்த நீர்க்குழி ஒன்றில் முகத்தைக் கழுவ முயன்றபோது அதில் வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த குறித்த மாணவன் பல ஆண்டுகளாக வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சாலியாவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM