வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆயிலடி பகுதியில் வேப்பமரம் முறிந்து வீழ்ந்ததில், ஒன்றரை வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
குறித்த குழந்தை மற்றும் இரு சிறுவர்கள் அவரது உறவினர் ஒருவருடன் அயல்வீட்டிற்கு சென்றுவிட்டு வீடுநோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
இதன்போது வீசிய பலத்த காற்றில் வீதிக்கரையில் இருந்த வேப்பமரத்தின் கிளை ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் குறித்த குழந்தை மற்றும் ஏனைய சிறுவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் காயமடைந்திருந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. சம்பவத்தில் ஆயிலடி பகுதியை சேர்ந்த மதுசன் லக்சாயினி என்ற ஒன்றரை வயது குழந்தை மரணமடைந்துள்ளதுடன், ஜீவிதா(10), சர்மிலாதேவி(8) ஆகிய சிறுமிகள் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
வவுனியாவில் இன்றையதினம் மதியம் அனைத்து பகுதிகளிலும் பலத்த காற்று வீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM