வவுனியாவில் இன்று பிற்பகல் வீசிய பலத்த காற்றினால் மூன்றுமரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
அந்தவகையில் வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலக வளாகத்தில் நின்றிருந்த வேப்பமரம் ஒன்று அடியோடு சாய்ந்து வீழ்ந்துள்ளதுடன், வவுனியா ஹொறவப்பொத்தான பிரதான வீதியில் நாலாம்கட்டை பகுதியில் நின்றிருந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்து வீதியின் குறுக்காக வீழ்ந்துள்ளது.
இதன்போது குறித்த வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவர் தெய்வாதீனமாக உயிர்பிழைத்துள்ளதுடன் அவரது மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
இதேவேளை ஹொறவப்பொத்தான வீதி றம்பைக்குளம் சந்திக்கு அண்மையில் முறிந்து வீழ்ந்த மற்றொரு மரத்தினால் அதன் கீழ் நின்றிருந்த ஒருவர் சிறுகாயங்களிற்கு உள்ளாகியுள்ளார்.
வவுனியாவில் கடந்த சில தினங்களாக மழையுடனான காலநிலை நிலவிவருகின்றது. இந்நிலையில் இன்று பிற்பகல் திடீரென வீசிய பலத்த காற்றினால் குறித்த மரங்கள் முறிவடைந்துள்ளது.
இதேவேளை முறிந்து வீழ்ந்த மரங்களை அவ்விடத்தில் ஒன்றுகூடிய இளைஞர்கள் உடனடியாக அகற்றியிருந்தனர்.
குறித்த சம்பவத்தினால் வவுனியா ஹொறவப்பொத்தான வீதியூடான போக்குவரத்து சிலமணி நேரங்கள் தாமதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM