(செ.தேன்மொழி)
தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 3 வேட்பாளர்கள் உட்பட 210 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் , சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
தேர்தல் சட்டவிதிகளை மீறியதாக 3 வேட்பாளர்கள் உட்பட 210 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுத் தொடர்பில் 147 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் , 44 பாரிய குற்றச் செயல்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இதேவளை அரச வாகனங்கள் 2 உட்பட 60 வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இது தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவித்து அவரது ஆலோசனைக்கமைய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கேள்வி :குருநாகல் அரச மண்டப உடைப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
பதில்: ஆம், இதன்போது குருநாகல் நகரசபை மற்றும் போக்குவரத்து அதிகார சபைக்கு எதிராகவே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளில் பிரகாரம் கிடைக்கப்பெறும் தகவல்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்து , அவரது ஆலோசனைக்கமைய நடவடிக்கை எடுக்கப்படும்.
--
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM