திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 18 பவுன் தங்க நகைகள் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை நேற்றிரவு (18) கைது செய்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவிகக்கின்றனர்.
அல்லை நகர், தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரையே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தோப்பூர் பகுதியில் உள்ள வீடொன்றில் 18 பவுன் தங்க நகைகளை திருடிய சந்தேகத்தின் பேரில் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபருக்கெதிராக பல திருட்டு வழக்குகள் நீதிமன்றில் நடைபெற்று வருவதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM