பயாகல பகுதியில் பஸ் விபத்து 36 பேர் காயம்

Published By: Robert

09 Dec, 2015 | 10:00 AM
image

பயாகல - கடுகுருந்த பகுதியில் இன்று அதிகாலை 04.10 மணிளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 36 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பயாகல பொலிஸார் தெரிவித்தனர். 

புதுக்கடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று கட்டுகுருந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேளை, கத்மணவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மற்றுமொரு பஸ் அதனுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

சம்பவத்தில் காயமடைந்த 3 பெண்கள் உள்ளிட்ட 36 பேர் களுத்துறை - நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் 15 இராணுவ சிப்பாய்களும் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான  ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். 

குறித்த விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் குழுக்களை விசாரித்து...

2023-05-29 15:15:45
news-image

நீங்களும் நடாசாவின் நிகழ்ச்சிக்கு சென்றீர்களா? பொலிஸார்...

2023-05-29 14:42:30
news-image

திருமலை தொல்பொருள் திணைக்கள அருங்காட்சியகத்தில் தீ...

2023-05-29 14:31:51
news-image

சம்மாந்துறையில் அதிபருக்கு எதிராகவும் சார்பாகவும் மாணவர்கள்,பெற்றோர்கள்...

2023-05-29 14:30:25
news-image

யாழில் மோட்டார் சைக்கிளும் கனரக வாகனமும்...

2023-05-29 13:47:44
news-image

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பலமாகவே உள்ளது...

2023-05-29 13:02:04
news-image

கிழக்கு மாகாண அரச அதிகாரிகள் -...

2023-05-29 14:37:54
news-image

கைத்தொலைபேசிகள், குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள்,...

2023-05-29 13:07:42
news-image

வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை  புண்ணியஸ்தலத்தை புனிதபூமியாக...

2023-05-29 14:31:45
news-image

திருமண நிகழ்வில் பட்டாசு வெடித்து ஒருவர்...

2023-05-29 12:41:20
news-image

வடக்கும் மலையகமும் ஒன்றாக இணைந்து பயணிக்கவேண்டிய...

2023-05-29 12:21:57
news-image

கொழும்பு கிராண்டபாஸில் 67 வயதுடைய பெண்ணிடம்...

2023-05-29 12:21:39