கிளி­நொச்­சியில் மீண்டும் கடும் ­மழை; பரீட்சை எழுத சென்ற மாண­வர்கள் பெரும் அவதி 

09 Dec, 2015 | 09:32 AM
image

கிளி­நொச்சி மாவட்­டத்தில் தற்­போது பெய்து வரும் கடும் மழை கார­ண­மாக ஏற் ­பட்­டுள்ள வெள்ளம் வீதி­களில் குறுக்­க­றுத்து பாய்­வ­தனால் சாதாரண தர பரீட்­சைக்கு செல்லும் மாண­வர்கள் பெரும் நெருக்­க­டி­களை சந்­தித்து வரு­கின்­றனர்.

அத்­தோடு பரீட்சை மண்­ட­பங்­க­ளிலும் இருள் சூழ்­ந்த நிலைமை காணப்­ப­டு­வ­த னால் மாண­வர்கள் மேலும் சிர­மங்­களை சந்­தித்து வரு­கின்­றனர்.

கிளி­நொச்­சியில் 43 பரீட்சை நிலை­யங்­களில் 5561 பேர் 2015 க.பொ.த. சாதா­ர­ண­தர பரீட்சை எழு­து­கின்­றனர். இதில் 3261 பாட­சாலை பரீட்­சார்த்­தி­களும் 2286 தனிப்­பட்ட பரீட்­சார்த்­தி­களும் அடங்­கு­ கின்­றனர். அத்­தோடு 10 பரீட்சை இணை ப்பு அலு­வ­ல­கங்­களும் அமைக்­கப்­பட்­டு ள்­ளன.

மேற்­படி பரீட்­சைக்கு தோற்றும் மாண­வர்கள் தொடர்ச்­சி­யாக பெய்து வரும் மழை கார­ண­மாக பரீட்சை நிலை­யங்­க­ளுக்கு சென்று வரு­வதில் பெரும் சிர­மங்­களை எதிர்­கொள்கின்றனர்.

இதே­வேளை பூந­கரி கல்­விக்­கோட்­டத் தின் முழங்­காவில் மற்றும் ஜெய­புரம் பிர­தே­சங்­க­ளுக்­கான பரீட்சை வினாத்­தாள்கள் மாங்­குளம், மல்­லாவி, வெள்­ளாங்­குளம், ஊடாக நூற்­றுக்­க­ணக்­கான கிலோ மீற்றர் சுற்­றியே எடுத்துச் செல்­லப்­ப­டு­கி­றது. பூந­கரி, மன்னார் ஏ –35 வீதியில் மண்­டக்­கல்­லாறு பெருக்­கெ­டுத்து பாய்­வ­த­னாலும், முறி­கண்டி, முழங்­காவில் வீதியில் அக்­க­ராயன் பகு­தியில் வீதியை குறுக்­க­றுத்து வெள்ளம் பாய்­வ­த­னாலும் மேற்­படி மாற்­று­வ­ழி பயன்­ப­டுத்­தப்படுகிறது.

நேற்றுக் காலை முதல் பெரும்­பா­லான பரீட்சை நிலை­யங்­க­ளுக்கு கிளி­நொச்சி வலயக் கல்விப் பணிப்­பாளர் நேர­டி­யாக சென்று நிலை­மை­களை பார்­வை­யிட்­டுள்­ள­தோடு இரு­ள் சூழ்ந்த பரீட்சை நிலை­ய ங்­களின் நிலை­மை­களை தவிர்­க்கும் பொரு ட்டு ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டுள்ளார். மின்சாரம் கிடைக்கப்பெறாத கிளிநொச்சி வன்னேரிக்குளம் மகா வித்தியாலயத்திற்கு மின் பிறப்பாக்கி மூலம் மின்சார வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளமை குறி ப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11