கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற் பட்டுள்ள வெள்ளம் வீதிகளில் குறுக்கறுத்து பாய்வதனால் சாதாரண தர பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.
அத்தோடு பரீட்சை மண்டபங்களிலும் இருள் சூழ்ந்த நிலைமை காணப்படுவத னால் மாணவர்கள் மேலும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
கிளிநொச்சியில் 43 பரீட்சை நிலையங்களில் 5561 பேர் 2015 க.பொ.த. சாதாரணதர பரீட்சை எழுதுகின்றனர். இதில் 3261 பாடசாலை பரீட்சார்த்திகளும் 2286 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்கு கின்றனர். அத்தோடு 10 பரீட்சை இணை ப்பு அலுவலகங்களும் அமைக்கப்பட்டு ள்ளன.
மேற்படி பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பரீட்சை நிலையங்களுக்கு சென்று வருவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இதேவேளை பூநகரி கல்விக்கோட்டத் தின் முழங்காவில் மற்றும் ஜெயபுரம் பிரதேசங்களுக்கான பரீட்சை வினாத்தாள்கள் மாங்குளம், மல்லாவி, வெள்ளாங்குளம், ஊடாக நூற்றுக்கணக்கான கிலோ மீற்றர் சுற்றியே எடுத்துச் செல்லப்படுகிறது. பூநகரி, மன்னார் ஏ –35 வீதியில் மண்டக்கல்லாறு பெருக்கெடுத்து பாய்வதனாலும், முறிகண்டி, முழங்காவில் வீதியில் அக்கராயன் பகுதியில் வீதியை குறுக்கறுத்து வெள்ளம் பாய்வதனாலும் மேற்படி மாற்றுவழி பயன்படுத்தப்படுகிறது.
நேற்றுக் காலை முதல் பெரும்பாலான பரீட்சை நிலையங்களுக்கு கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் நேரடியாக சென்று நிலைமைகளை பார்வையிட்டுள்ளதோடு இருள் சூழ்ந்த பரீட்சை நிலைய ங்களின் நிலைமைகளை தவிர்க்கும் பொரு ட்டு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். மின்சாரம் கிடைக்கப்பெறாத கிளிநொச்சி வன்னேரிக்குளம் மகா வித்தியாலயத்திற்கு மின் பிறப்பாக்கி மூலம் மின்சார வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளமை குறி ப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM