(செ.தேன்மொழி)
இனவாதத்தின் ஊடாக தேர்தலை வெற்றிக் கொண்ட ராஜபக்ஷாக்கள் , கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் தேர்தலை வெற்றிக் கொள்ளவே முயற்சித்து வருகின்றார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி பொதுச் செயலாளர் சுஜீவ சேனசிங்க குற்றஞ்சாட்டினார்.
சிங்கள பௌத்தம் என்பது தமிழ், முஸ்லீம் மக்களை கொலைச் செய்து கடலில் எரிவது அல்ல மாறாக அவர்களும் தங்களைப் போன்று வாழ்வதற்கான சமமான சூழலை ஏற்படுத்தி கொடுத்பதே என்று தெரிவித்த அவர் , இவ்வாறான குணம் கொண்ட சிறந்த சிங்கள பௌத்த உறுப்பினர்கள் தங்களுடன் இணைந்துக் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
கொவிட் -19 வைரஸ் பரவல் தொடர்பில் மீண்டும் அச்சம் எழுந்துள்ளது. முதல் கட்டத்தைவிட இரண்டாம் கட்டத்தில் பாதிப்புகள் அதிகரிக்குமோ என்ற பயம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது. இந்நிலையில் இதனால் நாட்டு மக்களுக்கு உயிர் ஆபத்துகள் எதுவும் ஏற்பட்டால். தற்கு ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , சுகாதார சேவைகளின் பிரதாணி , தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அனைவருமே பொறுப்புக் கூற வேண்டும். இதேவேளை கொலை குற்றத்தின் கீழ் நாட்டு மக்கள் இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவும் முடியும்.
அரசாங்கத்தினர் இராணுவத்தினரை காண்பித்தே தொடர்ந்தும் தேர்தலை வெற்றிக் கொள்ள முடியாது என்பதினால் கொரோனா நெருக்கடியின் மத்தியில் தேர்தலை வெள்ளிக் கொண்டு ராஜபக்ஷாக்கள் என்ற விருட்சத்தை மேலும் வளர்ச்சிப் பெறசெய்ய முயற்சித்து வருகின்றனர். இம்முறை தேர்தலில் ராஜபக்ஷாக்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெருந் தொகையானோர் போட்டியிடுகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டின் ஜனாதிபதி ,பிரதமர் , பாதுகாப்பு அமைச்சர் , பொருளாதார அமைச்சர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் பதவிவகிக்கும் முதல் நாடு இலங்கையே. இந்த நிலைமையை எண்ணி நாம் தலைகுனிய வேண்டும். இது ஒரு அடிமைத்தனமாகும். அரச குடும்பங்களின் ஆட்சிகள் இடம்பெறும் நாடுகளில் கூட எல்லா பதவிகளையும் அவர்களே வகிப்பதில்லை. இந்த நிலைமைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே பொறுப்பு கூறவேண்டும். அவர்தான் ராஜபக்ஷாக்களின் குடும்பத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்.
ஐ.தே.க. வின் உபதலைவர் ரவி கருணாநாயக்க சிறந்த முறையில் செயற்படும் தலைவர்கள் மீது நாங்கள் குற்றம் சுமத்துவதாக கூறியுள்ளார். அவரது செயற்பாடுகள் தொடர்பில் எங்களுக்கு தெரியும். கோதாபய ராஜபக்ஷ ஆட்சிமுறை தோல்வியையே சந்தித்துள்ளது. வைரஸ் பரவலை நாட்டுகள் வரவிடாமல் தடுக்க இவர்களால் முடியாமல் போயிருந்தாலும், வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக முறையாக செயற்பட்டனர்.
இவர்களை போன்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் தலைமையிலான எமது குழுவினருக்கும் செயற்பட முடியும். மூன்று மாதங்களுக்கு நாட்டை முடக்கி வைக்க எடுத்த தீர்மானத்தின் காரணமாகவே மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. சிக்கலை ஏற்படுத்தியுள்ள மின்கட்டணங்களை அரசாங்கம் செலுத்தும் என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தாலும், கட்டண பட்டியல்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க , சஜித் பிரேமதாச ஓவ்வொரு மாதத்திற்கும் 20 ஆயிரம் ரூபாப்படி 12 மாதங்களுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளதாக குறிபபிட்டுள்ளார். 12 மாதங்களும் இவ்வாறு வழங்க எங்களுக்கு புத்தியில்லையா? இரு மாதங்களுக்கே நிவாரணம் பெற்றுக் கொடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். வாழ்வாதாரம் இன்றி பாதிப்படைந்துள்ள மக்களுக்கே இவ்வாறு 20 ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொடுப்பதாக அவர் தெரிவித்திருக்கின்றார்.
பொருட்களின் விலை கட்டுபாட்டை ஏற்படுத்த முடியாத ஜனாதிபதியால் என்ன செய்யமுடியும். அரச நிர்வாக துறைகளில் இராணுவத்தினை நியமிப்பதால் முறையான செயற்பாடுகள் எதுவும் முன்னெடுக்கப்படாது.தற்போது சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடுவதற்கும் இராணுவத்தினம் ஒப்படைக்க போகின்றனர். இதுவும் இராணுவ ஆட்சிக்கான முயற்சிதான்.
சஹ்ரானுக்கு சம்பளம் கொடுத்தார்கள். கருத்தடை மருந்துகள் , சரியா கற்கை நிலையங்கள் என்றார்கள். தற்போது வைத்தியர் சாபிக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளார்களா? முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவும் அவர்களுடன்தான் இணைந்துக் கொண்டுள்ளார். இனவாதத்தை தூண்டி அப்போது தேர்தலை வெற்றிக் கொண்டனர். தற்போது தொடர்ந்து வரும் தீமையான காலநிலையும் அவர்களுக்கே நன்மையாக அமைகின்றது.
மக்களை ஏமாற்றுவது இலகுவானது என்றாலும் , தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது. யுத்தத்தை வெற்றி பெற்றதாகவே ராஜபக்ஷாக்கள் பெருமைக் கொள்கின்றனர். ஆனால் ஒவ்வவொரு நாளும் யுத்த்தை சாப்பிட்டு உயிர்வாழ முடியுமா? சிங்கள பௌத்தம் என்று இனவாதத்தை போசித்து வந்தார்கள். அதே சிங்கள பௌத்தத்தை மதிக்கும் பல உறுப்பினர்கள் எம்முடனும் இருக்கின்றார்கள். சிங்கள பௌத்த குணம் என்பது இந்நாட்டு மக்கள் அனைவரையும் வாழவைப்பதே தவிர , தமிழ் , முஸ்லீம் மக்களை கொலைச் செய்து கடலில் எறிவது அல்ல.சிங்க பொளத்த மக்களுக்க முன்னுரிமை கொடுப்பதுடன் ஏனைய , இனத்தவர்களும் சமமான முறையில் வாழுவதற்கான சூழலை நாங்கள் ஏற்படுத்திக் கொடுப்போம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM