(ஆர்.யசி)
கொவிட் 19 வைரஸ் பரவல் குறித்த வதந்திகள் காரணமாகவே மாணவர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் இடம்பெறக்கூடாது என்பதற்காக பாடசாலைகள் மூடப்பட்டது. எவ்வாறு இருப்பினும் அடுத்த வாரம் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போதே அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இவற்றைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொவிட் -19 வைரஸ் பரவலை குறித்த பொய்யான பிரச்சாரங்கள் முன்வைக்கப்பட்டவுடன் அதனை அடிப்படையாக கொண்டு மாணவர்களை அனாவசியமாக அச்சுறுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்ற காரணத்தினால் தான் ஒரு வாரகாலத்திற்கு பாடசாலைகளை மூடுவது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஆனால் பல்கலைக்கழகங்கள் மூடப்படவில்லை. ஏனென்றால் இறுதி ஆண்டு மாணவர்களை மாத்திரமே பல்கலைக்கழகத்திற்கு அழைக்கப்பட்டனர். அவர்களுக்கான பரீட்சைகளை நடத்த வேண்டும், அவ்வாறான நிலையிலும் விடுதிகளில் கூட ஒரு அறையில் ஒருவர் என்ற அடிப்படையில் தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள் ஆரம்பிப்பது குறித்து அமைச்சரவையில் பேசப்பட்டது. கல்வி அமைச்சர் டலஸ் அழகபெரும ஜனாதிபதி மற்றும் பிரதமரை தெளிவுபடுத்தினார். எவ்வாறு இருப்பினும் அடுத்த வாரமளவில் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது. பெரும்பாலும் அடுத்தவாரம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படலாம் என எதிர்பார்க்க முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM