பொதுத்தேர்தலை பிற்போட்டால் நாட்டில் அரசியலமைப்பு ரீதியில் பாரிய நெருக்கடி ஏற்படும் - சுசில் பிரேஜயந்த

Published By: Vishnu

16 Jul, 2020 | 01:58 PM
image

 (இராஜதுரை ஹஷான்)

பொதுத்தேர்தலை தொடர்ந்து பிற்போட்டால் நாட்டில் அரசியலமைப்பு ரீதியில்  பாரிய நெருக்கடி ஏற்படும் எனத் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுகில் பிரேமஜயந்த, ரணில், சஜித் பொறுப்புடன் மக்கள் மத்தியில் கருத்துரைக்க வேண்டும் என்றும் கூறினார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொவிட் -19 வைரஸ் பரவலை  காரணம் காட்டி, ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலை  பிற்போடுமாறு எதிர் தரப்பினர்குறிபபிட்டுக் கொள்கிறார்கள் 

தேர்தலில்  வாக்களிக்க  மக்கள் தயாராக உள்ளார்கள். போட்டியிட  தைரியம் இல்லாதவர்களே தேர்தலை பிறபோடுமாறு குறிப்பிட்டுக்  கொள்கிறார்கள். தற்போது வைரஸ் தொற்று சமூக  தொற்றாக  பரவலடையவில்லை என்பதை சுகாதார தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

பொதுத்தேர்தலை தொடர்ந்து  பிற்போட்டால்   நாட்டில் அரசியலமைப்பு ரீதியான நெருக்கடிகள்   தோற்றம் பெறும். ஆகவே  ஐக்கிய  தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க,   ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்  சஜித் பிரேமதாஸ ஆகியோர் பொறுப்புடன் கருத்தரைக்க வேண்டும் என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58