(இராஜதுரை ஹஷான்)
பொதுத்தேர்தலை தொடர்ந்து பிற்போட்டால் நாட்டில் அரசியலமைப்பு ரீதியில் பாரிய நெருக்கடி ஏற்படும் எனத் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுகில் பிரேமஜயந்த, ரணில், சஜித் பொறுப்புடன் மக்கள் மத்தியில் கருத்துரைக்க வேண்டும் என்றும் கூறினார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கொவிட் -19 வைரஸ் பரவலை காரணம் காட்டி, ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலை பிற்போடுமாறு எதிர் தரப்பினர்குறிபபிட்டுக் கொள்கிறார்கள்
தேர்தலில் வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளார்கள். போட்டியிட தைரியம் இல்லாதவர்களே தேர்தலை பிறபோடுமாறு குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். தற்போது வைரஸ் தொற்று சமூக தொற்றாக பரவலடையவில்லை என்பதை சுகாதார தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
பொதுத்தேர்தலை தொடர்ந்து பிற்போட்டால் நாட்டில் அரசியலமைப்பு ரீதியான நெருக்கடிகள் தோற்றம் பெறும். ஆகவே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் பொறுப்புடன் கருத்தரைக்க வேண்டும் என்றும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM