ரவிராஜ் கொலை வழக்கை மூன்று சந்தேகநபர்கள் இல்லாமலேயே ஜனவரி முதல் விசாரணை செய்ய முடிவு 

09 Dec, 2015 | 09:16 AM
image

தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவிராஜ் படு­கொலை வழக்கை அடுத்த ஆண்டு ஜன­வரி மாதம் 4 ஆம் திகதி முதல் விசா­ரணை செய்ய தீர்­ம­னித்­துள்ள நீதி­மன்றம் தற்­போது வரை நீதி­மன்றை புறக்­க­ணித்து வரும் மூன்று சந்­தேகநபர்கள் இல்­லா­ம­லேயே அதனை விசா­ரணை செய்­வ­தா­கவும் அறி­வித்­தது.

ரவிராஜ் கொலை விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு நேற்று கொழும்பு மேல­திக நீதிவான் நிரோஷா பெர்னாண்டோ முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்த போதே நீதி­மன்றின் இந்த நிலைப்­பாட்டை நீதிவான் அறி­வித்தார்.

ரவி ராஜ் கொலை விவ­காரம் தொடர்பில், சுருக்க முறை­யற்ற வழக்கு விசா­ரணை ஒன்­றுக்­காக குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள 7 பேரில் மூவர் தொடர்ந்து தலை­ம­றை­வாக இருந்து வரும் நிலையில் அம்­மூ­வ­ரையும் உட­ன­டி­யாக கைது செய்ய திறந்த பிடி­வி­றாந்து உத்­த­ர­வையும் நீதிவான் நிரோஷா நேற்று பிறப்­பித்தார். அதன்­படி செமி சுரேஷ், சிவ­காந்தன் விவே­கா­னந்தன் மற்றும் பொலிஸ் புல­னாய்வுப் பிரிவு உத்­தி­யோ­கத்­த­ராக இருந்த பெபியன் ரொய்ஸ்டன் டூசைன் ஆகிய மூவ­ரையும் கண்ட இடத்தில் கைது செய்­யு­மாறு குறிப்­பிட்ட நீதிவான் சந்­தேக நபர்­க­ளாக ஆரம்­பத்தில் கரு­தப்­பட்ட நாலக மத்­த­க­தீர,அரு­ணு­சாந்த ஆகி­யோரை சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னைக்கு அமைய வழக்கில் இருந்து விடு­வித்தார்.

அதன்­படி ஜன­வரி நான்காம் திகதி முதல் தலை­ம­றை­வா­கி­யுள்ள மூன்று சந்­தேக நபர்­க­ளுக்கு மேல­தி­க­மாக கடற்­படை வீரர்­க­ளான பிரசாத் ஹெட்டி ஆரச்சி, காமினி சென­வி­ரத்ன, பிரதீப் சமிந்த மற்றும் சம்பத் முன­சிங்க ஆகிய ஏனைய சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ரா­கவும் விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­க­வுள்­ளன.

கடந்த நவம்பர் மாதம் மூன்றாம் திகதி முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவிராஜ் கொலை தொடர்பில் சந்­தே­க

ந­பர்கள் 6 பேருக்கு எதி­ராக குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கொழும்பு நீதிவான் நீதி­மன்­றத்தில் குற்­றப்­பத்­திரம் தாக்கல் செய்­யப்­பட்­டது. பின்னர் குற்றப் பத்­திரம் திரு­த் தப்­பட்டு மற்­றொ­ரு­வரும் அதில் சேர்க்­கப்­பட்­ட­துடன் சந்­தேகநபர்­களின் எண்­ணிக்கை 7 ஆக அதி­க­ரித்­தது.

சட்­டமா அதி­பரின் ஆலோ­ச­னைக்கு அமைய இந்தக் குற்றப் பத்­தி­ரங்கள் தாக்கல் செய்­யப்­பட்­டன.

நட­ராஜா ரவிராஜ் கொலை சம்­பந்­த­மாக சந்­தே­க­ந­பர்கள் 9 பேர் அடை­யாளம் காணப்­பட்ட நிலையில் அவர்­களில் 7 பேருக்கு எதி­ரா­கவே வழக்கு விசா­ர­னைகள் இடம்­பெ­ற­வுள்­ளன.

குற்றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ள­வர்­களில் மட்­டக்­க­ளப்பு பகு­தியைச் சேர்ந்த பழ­னித்­தம்பி சுரேஷ் மற்றும் சிவ­நேசன் விவே­கா­னந்தன் ஆகிய இரு­வரும் அடங்­கு­வ­துடன் அவர்கள் தற்­போது தலை­ம­றைவு வாழ்வை வாழ்ந்து வரு­கின்­றனர்.

இந்த இரண்டு நபர்­களும் விடு­தலைப் புலிகள் அமைப்­பி­லி­ருந்து பிரிந்­து­சென்­றி­ருந்த கருணா குழுவைச் சேர்ந்­த­வர்கள் என்று பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

தற்­போது தலை­ம­றை­வா­கி­யுள்­ள­தாக பொலிஸார் கூறு­கின்ற இவர்கள் இரு­வ­ரையும் கைது­செய்து நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­து­மாறு நீதி­பதி உத்­த­ர­விட்­டுள்ளார். அத்­துடன் இவர்­க­ளுடன் சேர்ந்து பொலிஸ் புல­னாய்வுப் பிரிவில் கட­மை­யாற்­றி­ய­தாக கூறப்­படும் டூசைன் என்­ப­வரும் தலை­ம­றை­வாகி அவுஸ்­தி­ரே­லி­யாவில் வசிப்­ப­தாக கூறப்­படும் நிலையில் அவ­ரையும் கைது செய்ய உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

ஆரம்­பத்தில் குற்­றப்­பத்­திரம் தாக்கல் செய்­யப்­ப­டாத ஏனைய மூன்று சந்­தே­க­ந­பர்­க­ளையும் விடு­தலை செய்­வது குறித்து சட்ட மா அதிபர் ஆலோ­சித்து வரு­வ­தா­கவும் மன்­றுக்கு அறி­விக்­கப்­பட்­டது.

இவ்­வாறு குற்றப் பத்­திரம் தாக்கல் செய்­யப்­ப­டாத சந்­தே­க­ந­பர்­களுள் ரவிராஜ் கொலை வழக்கில் பிர­தான சந்­தே­க­நபர் என்று கூறப்­பட்ட கடற்­படை அதி­கா­ரியும் உள்­ள­டங்­கி­யி­ருந்தார்.

சம்பத் முன­சிங்க என்ற இந்த கடற்­படை அதி­காரி முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்த­பாய ராஜ­பக் ஷ மற்றும் முன்னாள் கடற்­படை தள­பதி வசந்த கரன்­னா­கொட ஆகி­யோரின் பாது­காப்பு அதி­கா­ரி­யாக கட­மை­யாற்­றி­யுள்­ள­தா­கவும் கூறப்­பட்­டது. எவ்­வா­றா­யினும் குற்றப் பத்­தி­ரிகை திருத்­தப்­பட்ட நிலையில் சந்தேக நபர்கள் பட்டியலில் அவர் தற்போது சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் சந்தேக நபர்களாக ஆரம்பத்தில் கருதப்பட்ட நாலக மத்தகதீர,அருணுசாந்த ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

2006-ம் ஆண்டு நவம்பர் 10-ம் திகதி கொழும்பு நாரஹேன்பிட்டிய இராணுவ மருத்துவமனைக்கு முன்பாக பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீங்களும் நடாசாவின் நிகழ்ச்சிக்கு சென்றீர்களா? பொலிஸார்...

2023-05-29 14:42:30
news-image

திருமலை தொல்பொருள் திணைக்கள அருங்காட்சியகத்தில் தீ...

2023-05-29 14:31:51
news-image

சம்மாந்துறையில் அதிபருக்கு எதிராகவும் சார்பாகவும் மாணவர்கள்,பெற்றோர்கள்...

2023-05-29 14:30:25
news-image

யாழில் மோட்டார் சைக்கிளும் கனரக வாகனமும்...

2023-05-29 13:47:44
news-image

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பலமாகவே உள்ளது...

2023-05-29 13:02:04
news-image

கிழக்கு மாகாண அரச அதிகாரிகள் -...

2023-05-29 14:37:54
news-image

கைத்தொலைபேசிகள், குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள்,...

2023-05-29 13:07:42
news-image

வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை  புண்ணியஸ்தலத்தை புனிதபூமியாக...

2023-05-29 14:31:45
news-image

திருமண நிகழ்வில் பட்டாசு வெடித்து ஒருவர்...

2023-05-29 12:41:20
news-image

வடக்கும் மலையகமும் ஒன்றாக இணைந்து பயணிக்கவேண்டிய...

2023-05-29 12:21:57
news-image

கொழும்பு கிராண்டபாஸில் 67 வயதுடைய பெண்ணிடம்...

2023-05-29 12:21:39
news-image

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்ய...

2023-05-29 11:56:25