வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று வாகனங்களும் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று அதிகாலையில் இருந்து மாலை வரை வவுனியா பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக தேர்தல் விதிமுறையை மீறி சுவரொட்டிகள் காட்சிப்படுத்தியமை, தபால் மூல வாக்களிப்பு பகுதியில் பிரச்சாரம் முன்னெடுத்தமை, தேர்தல் விதிமுறைக்கு மாறாக வாகனங்களில் தேர்தல் சுவரொட்டிகள் கொண்டு சென்றமை, வாகனங்களில் வேட்பாளர்களின் படங்களை காட்சிப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்
அத்துடன், கைது செய்யப்பட்ட கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த நபர்களை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM