பெல்ஜியம் மார்ச் மாதத்திற்கு பிற்பட்ட காலப்பகுதியில் முதன்முறையாக 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கபட்ட நாடுகளில் ஒன்றாக விளங்கிய பெல்ஜியத்தில் மார்ச் 10 ஆம் திகதிக்கு பின் முதல் முறையாக நேற்று முன்தினம் 24 மணி நேரத்தில் புதிய கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
எனினும் நேற்றைய தினம் 05 இறப்புகள் பதிவாகியுள்ளதுடன், 94 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
ஏப்ரலில் தினசரி இறப்பு எண்ணிக்கை 343 ஆக இருந்து வந்துள்ள நிலையில், தற்போது கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கொரோனா தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட பல ஐரோப்பிய நாடுகளைப் போலவே, பெல்ஜியமும் நாட்டை முடக்கியது.
தற்போது கொரோனா தொற்றுநோய்களைக் குறைத்து வருவதையடுத்து கட்டம் கட்டமாக நாட்டை வழமைக்கு திருப்பும் பணியை ஆரம்பித்துள்ளது.
அதேவேளை, பெல்ஜியத்தில் 62,781 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 9,787 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM