(எம்.ஆர்.எம்.வஸீம்)
சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு எதிராக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்து பொது எதிரியை பலப்படுத்த நாங்கள் தயார் இல்லை. அத்துடன் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தெரிவிக்கப்படும் அவதூறுகள் தொடர்பில் ஆராய்ந்து அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என சிலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் செயலாளர் ராேஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.
சிறிலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு சிறிலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன என்ற பெயரில் மொட்டு சின்னத்தில் போட்டியிட தீர்மானித்தோம். அத்துடன் எமது கட்சிக்கு வேட்புமனுவில் போதுமான சந்தர்ப்பங்கள் கிடைக்காத மூன்று மாவட்டங்களில் நாங்கள் எமது கட்சியின் கை சின்னத்தில் தனித்து போட்டியிடுகின்றோம். எவ்வாறு இருந்தாலும் கொள்கையில் நாங்கள் ஒன்றாக செயற்படுகின்றோம்.
என்றாலும் கடந்த காலங்களில் தேர்தல் பிரசார மேடைகளில் எமது கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராகவும் அவரின் வெற்றியை தடுக்கும் வகையிலும் எமது அணியில் போட்டியிடும் ஒருசிலர் பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இது தேர்தல் சட்டத்தையும் மீறுகின்ற செயலாகும். இதுதொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் முறைப்பாடு செய்திருக்கின்றோம்.
அத்துடன் கடந்த 2015 ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத் தேர்தலின்போதும் உள்நாட்டு வெளிநாட்டு சதித்திட்டங்கள் மூலம் எம்மை தோல்வியடையச் செய்ததாகவும் அதேபோன்றதொரு சதித்திட்டம் வேறு கோணங்களில் தற்போதும் இம்பெற்று வருவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்திருக்கின்றார்.
இவ்வாறான நிலையில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக அதே அணியில் இருந்து தெரிவிக்கப்படும் அவதூறுகள் எமது கூட்டணியை குழப்புவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற சதியாகவும் இருக்கலாம். அதனால் எமக்கு எதிராக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்து, எமது பொது எதிரியை பலப்படுத்தவோ எமக்கு எதிராக ஆயுதம் ஏந்த, அவர்களுக்கு ஆயுதம் வழங்கவோ நாங்கள் தயாரில்லை எனடறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM