(இராஜதுரை ஹஷான்)
பொது மக்களின் சுகாதார பாதுகாப்புக்கு அரசாங்கம் எந்நிலையிலும் முக்கியத்தவம் கொடுக்கும். நெருக்கடியான சூழ்நிலையில் பொதுத்தேர்தலை நடத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. கொவிட்- 19 வைரஸ் தாக்கத்தினால் வீழ்ச்சியடைந்துள்ள பொருளதாரத்தை மீள் கட்டியெழுப்ப வேண்டுமாயின் பெரும்பான்மையுடன் பலத்துடன் பாராளுமன்றத்தில் நிலையான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீறிஸ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டர்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து முறையான நவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. பொது மக்களின் சுகாதார பாதுகாப்பினை கருத்திற் கொண்டே ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இடம்பெறவிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் மூன்று நாட்களுக்கு இரத்து செய்யப்பட்டுள்ளன.
பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பெரும்பாலான மக்கள் கலந்துக் கொள்வது இயல்பான விடயம். ஆகவே சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முறையாக செயற்படுத்த வேண்டும் என்பதற்காகவே பிரசாரக் கூட்டங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளன. அரசாங்கம் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முறையாக
செயற்படுத்தும்.
கொவிட்- 19 வைரஸ் தாக்கத்தினால் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீள் கட்டியெழுப்ப வேண்டுமாயின் பலமான அரசாங்கம் பெரும்பான்மை ஆதரவுடன் தோற்றம் பெற வேண்டும். என்பதன் காரணமாகவே நெருக்கடியான நிலையில் பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளது. ஆகவே மக்கள் நிலைமையினை புரிந்துக் கொள்ள வேண்டும்.
பல அடிப்படை பிரச்சினைகளுக்கு புதிய அரசாங்கத்தில் தீர்வு காண வேண்டும். அரசியலமைப்பின் 17, 19ஆகிய திருத்தங்களில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் மீள்பரிசீலளை செய்யப்படுவதுடன், தேர்தல் முறைமையும் திருத்தம் செய்யப்பட வேண்டும். விருப்பு வாக்கு முறைமை அனைத்து கட்சிகளிலும் முரண்பாட்டை தோற்றுவித்துள்ளது. புதிய தேர்தல் திருத்த முறைமையும் அறிமுகப்படுத்த வேண்டும். இவற்றை செயற்படுத்த பொதுஜன பெரமுன பாராளுமன்றில மூன்றில் இரண்டு ஆசனங்களை கைப்பற்ற வேண்டியது அவசியமாகும் என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM