அரசு ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி சுதந்திரமாக செயற்பட ஆவனம் செய்ய வேண்டும் என முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
வவுனியா பாலமோட்டை கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தங்களுக்கான அரசியல் தலைமையை இந்த பாராளுமன்ற தேர்தலில் தெரிவு செய்யவுள்ளனர். கடந்த காலத்தில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் 16 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்திருந்தனர்,
தமிழ் மக்களுக்கு அதிலும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவை உள்ளது. அடுத்து யுத்தத்தினால் இழந்து போன எங்கள் பிரதேசத்தினை மீள் கட்டியெழுப்ப பாரியளவில் நிதியுதவி தேவைப்படுகின்றது.
அத்துடன் கடந்த 30 வருடமாக தமிழ் மக்களுக்கு தீர்க்கப்படாமல் உள்ள அரசியல் ரீதியான பிரச்சனையும் தீர்க்கப்பட வேண்டிய தேவை உள்ளது. இந்த முக்கிய பிரச்சனைகளுக்காகவே கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பிற்பாடு தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தமது ஆதரவை வழங்கியிருந்தார்கள்.
ஆனால் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டியவர்கள் நீதியை பெற்றுகொடுக்க வேண்டியவர்கள் அரசாங்கத்திற்கு விலைபோய் முண்டு கொடுத்த நிலைமைதான் தொடர்ந்துகொண்டிருந்தது.
ஆகவே இந்த பாராளுமன்ற தேர்தலின் ஊடாக தமிழ் மக்கள் தமக்கு உறுதியான தலைமைத்துவம் தேவை என்பதனை உணர்ந்துள்ளனர். அதற்கான அரசியல் இடைவெளியும் ஏற்பட்டுள்ளது. ஆகவே அந்த இடைவெளியை நிரப்புவதற்காக இந்த தேர்தலில் தமிழ் மக்கள் தேசியக்கூட்டணிக்கு மக்கள் ஆதரவினை வழங்க வேண்டும்.
அத்துடன் ஊடக சுதந்திரம் தொடர்ந்தும் மீறப்பட்டு வருகின்றது. அண்மையில் பொலிஸ் உத்தியோகத்தரினால் ஊடகவியலாளர் ஒருவர் அச்சுறுத்தப்பட்டு அவருடைய புகைப்பட கருவியும் பறிக்க முயற்சிக்கப்பட்டுள்ளது.
எனவே அரசாங்கம் ஊடகவியலாளர்களையும் ஊடங்களையும் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும் என்பதுடன் அவர்களுக்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். அதற்கான பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது எனவும் தெரிவித்தார்,
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM