கொரோனா வைரஸ் துகல்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காற்றில் உயிருடன் இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லண்டனின் இம்பீரியல் கல்லூரியின் இன்ப்ளூவன்ஸா வைராலஜி தலைவரான வெண்டி பார்க்லே, கொரோனா வைரஸ் துகல்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காற்றில் தொற்றுநோயாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
"இந்த நோய் பரவுவதற்கு காற்று மண்டலம் பங்களிக்கிறது என்பதை உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) ஒப்புக் கொண்டது இதுவே முதல் முறை" என்றார்.
"நிச்சயமாக, வேறு வழிகளும் உள்ளன. ஆனால் இந்த புதிய ஒப்புதல் என்னவென்றால், காற்று வழியாக செல்லும் பாதை சில சூழ்நிலைகளிலும் பங்களிக்கும்" என்பது தான். இந்த வைரஸ் காற்றில் இடைநிறுத்தப்பட்டு அவற்றை சுவாசித்த நபரிடமிருந்து சிறிது தூரம் பயணிக்கக்கூடும் என்று பார்க்லே கூறினார். ஆய்வக ஆய்வுகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காற்றில் தொற்றுநோயாக இருக்கக்கூடும் என்று காட்டியது.
சில ஏர் கண்டிஷனிங் அமைப்புகளைப் போல காற்றை மறுசுழற்சி செய்வதை விட, ஒரு அறையில் காற்றை நிரப்புவது வைரஸ் பரவுவதைத் தவிர்ப்பதற்கு முக்கியமானது என்று அவர் கூறினார். கடந்த வாரம் உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) கொரோனா வைரஸ் காற்றில் இடைநிறுத்தப்பட்ட சிறிய துகள்களால் பரவக்கூடும் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன என்பதை ஒப்புக் கொண்டதை அடுத்து பார்க்லேவின் கருத்துக்கள் வந்துள்ளன.
நெரிசலான, மூடிய அல்லது மோசமாக காற்றோட்டமான அமைப்புகளில் வான்வழிப் பரவலை நிராகரிக்க முடியாது என்று உலக சுகாதார ஸ்தாபன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிகாரிகள் சான்றுகள் பூர்வாங்கமானது என்று எச்சரித்துள்ளனர். மேலும், இது குறித்து மதிப்பீடு தேவை. சான்றுகள் உறுதிசெய்யப்பட்டால், அது உட்புற இடங்களுக்கான வழிகாட்டுதல்களை பாதிக்கலாம்.
இன்றைய நிலவரப்படி, உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,30,32,918 ஆக உயர்வு; வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 75,79,516ஆக உயர்வு; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,71,356ஆக உயர்வு.
அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 34,13,995ஆக உயர்வு; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,37,782 ஆக உயர்வு என்று ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM