வவுனியா கண்டிவீதியில் கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த முதியவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் அவர் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வாகனம், வவுனியாவில் அமைந்துள்ள வன்னிமாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலத்திற்கு முன்பாக சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டையிழந்து அதே திசையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துகொண்டிருந்த முதியவருடன் மோதி வீதிகரையில் இருந்த உயர் அழுத்த மின்சார கம்பத்துடனும் மோதி விபத்திற்குள்ளாகியது.
விபத்தில் உயர் அழுத்த மின்சார கம்பம் முழுமையாக சேதமடைந்தநிலையில் வாகனத்தின் மீது சரிந்து விழுந்தது. எனினும் உடனடியாக விரைந்து வந்த மின்சார சபை ஊழியர்கள் மற்றும் பொலிசாரின் செயற்பாட்டால் பாரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருந்தது.
இவ்விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த ரட்ணசிங்கம் வயது 59 என்ற முதியவர் படுகாமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் விபத்து பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மரணமடைந்துள்ளார்.
விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM