2020 பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகி தொடர்ந்து ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ளது.
இம்முறை தபால்மூல வாக்களிப்புக்காக ஏழு நாட்களை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஒதுக்கியுள்ளது. அதன் பிரகாரம் இன்று, நாளை மற்றும் 15, 16, 17ஆம் திகதிகளிலும் எதிர்வரும் 20, 21ஆம் திகதிகளிலும் தபால் மூல வாக்களிப்புகள் இடம்பெறவுள்ளன.
தேசிய தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, வாக்காளர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அஞ்சல் வாக்குகளை அளிக்க முடியும்.
தபால்மூல வாக்களிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு, தபால்மூல வாக்களிப்பு நிலையங்களில் இருக்கும் சுகாதார சேவைகள் அதிகாரிகளின் ஆலோசனைகளின் பிரகாரம் அனைவரும் தமது வாக்குகளை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு படையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களம், சுகாதார பிரிவினர் மற்றும் சகல மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலக அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் சேவையாற்றும் சேவையாளர்கள் எதிர்வரும் 14, 15 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு படையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களம், சுகாதார பிரிவினர் மற்றும் சகல மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலக அதிகாரிகள் எதிர்வரும் 16, 17ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும்.
இந்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியுமெனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
COVID-19 நெருக்கடியைக் கட்டுப்படுத்த வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படையில், தாபல் மூல வாக்காளர்கள் சமூக இடைவெளியை பராமரிக்கவும், முகக் கவசத்தை பயன்படுத்தவும், வாக்குச் சாவடிக்குள் நுழையும்போது கைகளைத் தூய்மைப்படுத்தவும், வாக்காளர்கள் தபால் வாக்குப்பதிவின் போது தங்கள் வாக்குச்சீட்டைக் குறிக்க பேனாவை கொண்டு வருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தபால் மூல வாக்களார்கள் வாக்குச் சாவடிக்குள் நுழைந்ததும் தமது சரியான அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
அதன்படி, வாக்காளர்கள் ஒரு தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதி பத்திரம், செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டை எண்ணைக் கொண்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டை ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.
இதற்கிடையில், வாக்குச் சீட்டுகள், தபால் வாக்குச் சாவடிகள் மற்றும் வளாகங்களைக் புகைப்படம் மற்றும் காணொளி பதிவுகளை எடுப்பதோ தடைசெய்யப்பட்டுள்ளது.
2020 பாராளுமன்ற தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு செயல்முறையை அவதானிக்க இரண்டு கண்காணிப்பு அமைப்புகளான பெப்ரல் மற்றும் தேர்தல் வன்முறை கண்காணிப்பு நிலையத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
இந் நிலையில் கொரோனா அச்சம் காரணமாக அநுராதபுரம், ராஜாங்கனை பிரதேச செயலர் பிரிவில் தபால் மூல வாக்களிப்பு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM