(செ.தேன்மொழி)
சமூகவளைத்தலங்கள் ஊடாக போலி பிரசாரங்களை மேற்கொள்ளும் நபர்களை கண்டறிவதற்காக பொலிஸ் ஊடகப்பிரிவு , தகவல் தொழிநுட்ப பிரிவு, குற்றப் புலனாய்வு பிரிவு என்பன சோதனையில் ஈடுப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
போலி பிரசாரங்கள் தொடர்பாக பொலிஸார் முன்னெடுத்துவரும் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகப்பேச்சாளரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
சமூகவளைத்தலங்கள் ஊடாக போலிபிரசாரங்களை பரப்பி வரும் நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவ்வாறான பிரசாரங்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறு போலி பிரசாரங்களை பரப்புபவர்களை இனங்காண்பதற்காக பொலிஸ் ஊடகப்பிரிவு , தகவல் தொழிநுட்ப பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவு என்பன மேற்பார்வை செய்து வருகின்றன.
இதன்போது கிடைக்கப் பெறும் தகவல்கள் அனைத்தும் பொலிஸ் ஊடகப்பிரிவுக்கு வழங்கப்படும்.
தகவல்கள் கிடைக்கப் பெற்றவுடன் பொலிஸ் ஊடகப்பிரிவு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும்.
இதுவரையில் போலி பிரசாரங்களை முன்னெடுத்துள்ள சில நபர்கள் தொடர்பில்தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவர்களை கண்டறிவதற்காக பொலிஸ் கண்காணிப்பு பிரிவினர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM