கருணாவை கைதுசெய்ய உத்தரவிடக் கோரி மேன் முறையீட்டு மன்றில் ரீட் மனு!

11 Jul, 2020 | 09:00 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை   உடனடியாகக் கைது செய்வதற்கு பதில் பொலிஸ் மா அதிபருக்கு கட்டளையிடுமாறு கோரி எழுத்தாணை மனுவொன்று ( ரீட் மனு) மேன்முறையீட்டு நீதிமன்றில்  நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த ஜூன் 25 ஆம் திகதி உயர் நீதிமன்றில் கருணா அம்மானின் கருத்துக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவினை தாக்கல் செய்த, கடுவலை நகர சபையின் உறுப்பினரும் பகுதி நேர வகுப்பு ஆசிரியருமான போசெத் கலஹேபத்திரண குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

ஓரே இரவில் இரண்டாயிரம், மூவாயிரம் இராணுவ உறுப்பினர்களைக் கொன்ற தாம், கொரோனா தொற்றை விட  ஆபத்தானவர் என கருணா வெளியிட்ட கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி ஜலித் விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவின் பிரதிவாதிகளாக கருணா அம்மானும், சட்ட மா அதிபரும், பதில் பொலிஸ் மா அதிபரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது வெளியிடப்பட்ட அந்தக் கருத்தின் மூலம் அவர் சமூகக் கொலைக்குற்றவாளி என்பது உறுதியாகியுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்தக் கருத்தை ஒப்புதல் வாக்குமூலமாகக் கருதி அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாட்சிகள்  கட்டளைச் சட்டம், குற்றவியல் தண்டனைச் சட்டம், பயங்கரவாத தடை சட்டம் , சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச இணக்கப்பாட்டு  சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு  குறித்த ரீட் மனுவில் கோரப்பட்டுள்ளது. அத்துடன் கருணாவின் கருத்துக்கள் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு 10 இலட்சம் ரூபா நட்ட ஈட்டையும் தமக்கு பெற்றுத் தருமாரு குறித்த ரீட் மனுவில் கோரப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08