நாட்டை மீளக்கட்டியெழுப்புவது குறித்து ரணில் வெளியிட்டுள்ள கருத்து

Published By: J.G.Stephan

10 Jul, 2020 | 02:51 PM
image

(நா.தனுஜா)

இனம், மதம் மற்றும் கட்சிகளின் அடிப்படையில் எமது தலைமுறை பிளவடைந்துவிட்டது. ஆனால் இந்த நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கு அத்தகைய மோதல்கள், பிளவுகளற்ற புதியதொரு அரசியல் நுட்பத்தை இளம் தலைமுறையினர் பின்பற்ற வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியிருக்கிறார்.

இளம் தலைவர்களை ஒன்றிணைக்கும் நோக்கிலான 'தலைமுறை' என்ற புதிய செயற்திட்டம் இன்றைய தினம் பி.ப 3 மணியளவில் கொழும்பில் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. இச்செயற்திட்டம் தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் காணொளியொன்றில்  கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

எமது தலைமுறை கட்சிகள், இனம் மற்றும் மதம் ஆகியவற்றின் அடிப்படையில் பிளவடைந்திருக்கிறது. எனினும் இந்த நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கு இளம் சமுதாயத்தினர் எவ்வித மோதலுமற்ற ஓர் புதிய அரசியல் நுட்பத்தைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

மேலும், ஒரு விரிவான இலக்கினை அடைந்துகொள்வதற்கு அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயற்படக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து மீண்டும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு 'தலைமுறை' ஒரு சிறந்த களமாக அமையும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37