(செ.தேன்மொழி)
போதைப் பொருள் கடத்தல் காரர்களினால் ஏற்பாடு செய்யப்படும் பிரசார கூட்டங்களில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ கலந்துக் கொண்டால் அவர் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர , தயவு செய்து இவ்வாறான கூட்டங்களை தவிர்க்குமாறும் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
ராஜபக்ஷாக்கள் எப்போதும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் மதுபான விற்பனைக்கு எதிராக செயற்படுபவர்கள் என்று தங்களை காண்பித்துக் கொண்டு , இந்த செயற்பாடுகளில் ஈடுப்படுபவர்களுடன் இணைந்தே தங்களது அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பார்கள்.
இந்த வகையிலே இன்றைய தினம் தெமட்டகொட பகுதியில் பிரபள போதைப் பொருள் கடத்துல்காரரான தெமட்டகொட சமிந்தவின் மகன் உள்ளிட்ட குழுவினரால் ஆளும் தரப்பினருக்கு சார்பாக பிரசார கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் , இதில் ஜனாதிபதியும் கலந்துக்கொள்ளவுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைவிடவும் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ சிறந்தவர் என்று மக்கள் நம்புகின்றனர்.
போதைப் பொருள் கடத்தலுக்கு எதிர்ப்பை தெரிவிப்பதாக காண்பித்துக் கொண்டு, அந்த கடத்தல் காரர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டங்களுக்கு தலைமைத்தாங்குதல் மிக கீழ்தரமான செயற்பாடாகும்.
இவ்வாறு செயற்படுவதால் மக்கள் கோதாபயவின் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். அதனால் இவ்வாறான கூட்டங்களை தவிர்ப்பதே மிகவும் சிறந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM