அரச உத்தியோகத்தர்கள் மீது அரசாங்கம் அக்கறையின்றி செயற்பட்டு வருகிறது - ரஞ்சித் மத்துமபண்டார

Published By: Digital Desk 3

09 Jul, 2020 | 04:56 PM
image

(செ.தேன்மொழி)

அரச உத்தியோகத்தர்கள் மீது அரசாங்கம் அக்கறையின்றி செயற்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார,  அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு தகுந்த பதிலடியை அரச உத்தியோகத்தர்கள் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

அரச ஊழியர்களின் நலன் கருதி நல்லாட்சி அரசாங்கம் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்திருந்தது. அரச சேவையாளர்களின் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவால் ஆட்சியமைத்து ஒருமாத காலத்திற்குள் அதனை செய்தும் காண்பித்திருந்தோம்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முன்னைய ஆட்சிக்காலங்களில் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை 2500 ரூபாவால் அதிகரிப்பதாக தெரிவித்து வந்த போதிலும் , அதனை நிறைவேற்ற வில்லை. 

இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் அங்கவீனமடைந்துள்ள இராணுவத்தினருக்கும் நல்லாட்சி அரசாங்கத்திலே பல்வேறு நலன்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தல் பிரசார காலங்களில் அங்கவீனமடைந்துள்ள இராணுவத்தினரை பயன்படுத்தி போராட்டங்களை கூட நடத்தி வெற்றிப் பெற்றவர்கள். ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா?

அரச நிர்வாகப்பிரிவினருக்கு பெரிதும் அளுத்தத்தை ஏற்படுத்தியுள்ள அரசாங்கத்தினர் மீது அரச ஊழியர்கள் தகுந்த பதிலடியை கொடுக்க வேண்டும். கொவிட் -19 வைரஸ் பரவலை காரணங்காட்டி அரச ஊழியர்களின் சம்பளத்தையும் கைப்பற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். எமது ஆட்சியில் நாங்கள் மின்சாரம் மற்றும் நீருக்கான கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுத்திருந்தோம் , ஒளடதங்களின் விலை , எரிபொருள் விலை என்பவற்றை குறைக்க நடவடிக்கை எடுத்திருந்தோம். 

ஒரு வருடத்திற்கான மின் கட்டணத்தை இரு மாதங்களிலே பெற்றுக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கின்றது. இந்நிலையில் தபாற் மூல வாக்களிப்புகள் எதிர்வரும் வாரங்களில் இடம்பெறுகின்றது. இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அரச ஊழியர்கள் தகுந்த பதிலடியை கொடுக்கும் வகையில் வாக்களியுங்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41