சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்ட வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு - 18 பேர் மீது வழக்குப் பதிவு

Published By: Digital Desk 4

09 Jul, 2020 | 11:59 AM
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா அச்சம் காரணமாக ஏற்பட்ட முடக்கம் மற்றும் ஊரடங்குச் சட்டம் என்பன முற்றாக நீக்கப்பட்டதையடுத்து வர்த்தக நடவடிக்கைககள் வழமைக்குத் திரும்பியுள்ளன.

இந்நிலையில் சட்டவிரோதமான முறையில் நிறுத்தல் அளத்தல் கருவிகளைக் கொண்டு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த 320 வர்த்தக நிலையங்கள் கடந்த ஒரு வாரத்தில் சுற்றிவளைக்கப்பட்டு 18 வர்த்தகர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்கள மாவட்ட பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌசாத் தெரிவித்தார்.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் பணிப்புரையின் பேரில் வவுணதீவு காத்தான்குடி  கொக்கட்டிச்சோலை வெல்லாவெளி மண்முனை வடக்கு களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் இச்சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

நகைக்கடைகள் சில்லறை வர்த்தக நிலையங்கள் பேக்கரிகள் உட்பட பல இடங்களில் குறித்த திணைக்கள அதிகாரிகள் தேடுதல் நடத்தினர்.

இதன்போது நிறைகுறைந்த பாண்கள் விற்பனை செய்தமை முத்திரை பதிக்காத நிறுத்தல் அளத்தல் கருவிகளைப் பாவித்து வியாபாரம் செய்தமை.

 உட்பட பல குற்றச்சாட்டுக்களின் பேரில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் ;மற்றும் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றம் ஆகியவற்றில் இவாகள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31