(எம்.மனோசித்ரா)
கதிர்காமம் புனித திருத்தலத்தின் வருடாந்த ஆடி வேல் விழா இம்மாதம் 21 ஆம் திகதி ஆரம்பமாகி ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை மாணிக்க கங்கையில் இடம்பெறும் தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.
கொவிட்-19 ஒழிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கி சுகாதாரப் பிரிவின் வழிகாட்டி ஆலோசனைகளுக்கு அமைவாக மத அனுஷ்டானங்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் வழங்கி இம்முறை கதிர்காமம் புனித திருத்தலத்தின் வருடாந்த ஆடி வேல் விழாவை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆடி வேல் விழாவில் பெரஹர நடைபெறும் முழுமையான கால எல்லை மக்களுக்கு பார்வையிடுவதற்கோ கலந்துகொள்வதற்கோ சந்தர்ப்பம் கிடைக்காது. அதே போன்று வடக்கு கிழக்கிலிருந்து உகந்தை, குமண - யால வனத்தினூடாக கதிர்காமம் புனித பூமிக்கு பாத யாத்திரையாக செல்வோருக்கு தேவையான வசதிகள் செய்யப்பட மாட்டாது என்றும் இதில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டு கதிர்காமத்திற்கு பொது மக்கள் வருவதற்கு அனுமதி வழங்காதிருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மொனராகலை செயலாளர் அறிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM