இஸ்ரேல் ஒரு புதிய உளவு செயற்கைக்கோளை ஏவியுள்ளது. இது தனது இராணுவ புலனாய்வுக்கு உயர்தர கண்காணிப்பை வழங்கும் என்று அந் நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மத்திய இஸ்ரேலில் உள்ள பால்மாச்சிம் விமானத் தளத்தில் உள்ள ஒரு ஏவுகணைப் பாதையில் இருந்து புறப்பட்ட ஷாவிட் ஏவுகணை வாகனத்தைப் பயன்படுத்தி உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணியளவில் "ஓஃபெக் 16" என்ற குறித்த உளவு செயற்கைக்கோள் விண்வெளியில் ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகமமும், விண்வெளி ஆய்வகவமும் தெரிவித்துள்ளது.
உளவுத்துறை செயற்கைக்கோள்களை இயக்கும், உலகில் உளவுத்துறை சேகரிக்கும் திறன்களை வழங்கும் ஒரு சிறிய எண்ணிக்கையிலான நாடுகளில் இஸ்ரேல் ஒன்றாகும்.
ஏப்ரல் மாத நிலவரப்படி, இந்த பட்டியலில் ஈரானும் அடங்கும், இது பல ஆண்டுகளாக தோல்வியுற்ற முயற்சிகளுக்குப் பிறகு ஒரு உளவு செயற்கைக்கோளை இஸ்ரேல் வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் செலுத்தியது.
"எங்கள் செயற்கைக்கோள்களின் வலைப்பின்னல் முழு மத்திய கிழக்கையும் பார்க்க அனுமதிக்கிறது - அதைவிட சற்று அதிகமாகும்" என்று இஸ்ரேலின் IAI இன் விண்வெளி திட்டத்தின் தலைவர் ஸ்லோமி சுதாரி கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM