Published by T. Saranya on 2020-07-06 14:17:07
நாட்டில் இன்றையதினம் திங்கட்கிழமை மேலும் 14 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களில்,07 பேர் வெலிகந்த ஆதார வைத்தியசாலையிலிருந்தும், 5 பேர் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையிலிருந்தும், 2 பேர் காத்தான்குடி வைத்தியசாலையிலிருந்தும் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,917 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் 2,076 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,
அதில் 148 பேர் நாடு முழுவதும் உள்ள 09 வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.
அத்துடன் 43 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் உயிரிழந்துள்ளனர்.