பஹ்ரைனில் சிக்கியிருந்த 290 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Published By: J.G.Stephan

05 Jul, 2020 | 04:58 PM
image

(எம்.மனோசித்ரா)

கொரோனா பரவல் காரணமாக இலங்கைக்கு வரமுடியாமல் பஹ்ரைனில் சிக்கியிருந்த 290 இலங்கையர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பினர். இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் இவர்கள் அனைவரும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இவ்வாறு வருகை தந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தொழில் நிமித்தம் அந்நாட்டில் தங்கியிருந்தவர்களாவர்.  

யு.எல்.202 என்ற விமானம் மூலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அத்தோடு நேற்று சனிக்கிழமை இரவு 11.45 மணியளவில் டுபாயிலிருந்து வந்த எமிரேட்ச் அரசுக்கு சொந்தமான இ.கே.648 என்ற விமானம் மூலம் இரு இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் கட்டாரின் டோஹா நகரிலிருந்து கட்டார் விமான சேவைக்கு சொந்தமான கியுவ்.ஆர்.668 என்ற விமானம் மூலம் 15 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:25:52
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22