டென்மார்க் நாட்டு யுவதியின் கையைப்பிடித்த நபருக்கு ஏற்பட்ட பரிதாபம்

Published By: Digital Desk 4

05 Jul, 2020 | 01:38 PM
image

திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டென்மார்க் நாட்டு பெண் சுற்றுலா பயணியொருவரின் கையைப்பிடித்த நபர் ஒருவரை நேற்று சனிக்கிழமை (4) மாலை  கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

டென்மார்க் நாட்டிலிருந்து சுற்றுலா பயணியாக திருகோணமலைக்குச் சென்ற பெண்ணின் கையை பாலியல் ரீதியில் பிடித்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருகோணமலையில் உள்ள ஹோட்டலோன்றில் குறித்த சுற்றுலா யுவதி தங்கியிருந்த நிலையிலே சந்தேக நபர் குறித்த யுவதியின் கையை பாலியல் ரீதியில் பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சந்தேக நபர் தொடர்பாக சுற்றுலா பயணியான டென்மார்க் யுவதி பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபரை பொலிஸார் தடுத்து வைத்துள்ளதோடு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16