மக்களின் ஆணை கிடைத்தவுடன் கிளிநொச்சி மாவட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு தாம் நடவடிககை எடுப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வடக்கிற்கு விஜயம் மேற்க்கொண்டு நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்க்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயம் மீன்பிடித்துறை உள்ளிட்டவை மிக முக்கயிமானதாக காணப்படுகின்றது அவற்றின் நிறைய நிலை கீழ் மட்டத்தில் காணப்படுகின்றது. அதனை உயர்த்த வேண்டும். அதற்கு அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கப்பட வேண்டும் அதனை உரிய நடவடிக்கைகள் மேற்க்கொண்டு தீரத்து வைக்க நடவடிக்கை எடுப்பேன்.
இங்கு பிரதான பிரச்சினையாக காணப்படுவது காணி மற்றும் வீட்டுப்பிரச்சனை எமது வேட்பாளர்களுடன் இணைந்து எமது வெற்றியுடன் மேற்படி பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்படும் இங்கு பல மாதிரி கிராமங்களை நான் அமைச்சராக இருந்த காலத்தில் நிறுவியுள்ளேன்.
எதிர்வரும் 5 ஆம் திகதி வெற்றிக்கு பின்னர் மேலும் பல மாதிரி கிராமங்களை இங்கு நான் நிறுவுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM