(செ.தேன்மொழி)
நாட்டில் கடந்த புதன்கிழமை நள்ளிரவு முதல் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு வரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 1733 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை நள்ளிரவு முதல் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு வரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக சபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதன்போது போதைப் பொருள் வைத்திருந்தமை தொடர்பில் 439 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் 239 சந்தேக நபர்கள் ஹெரோயின் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவர்களிடமிருந்து 229 கிராம் 586 மில்லி கிராம் தொகை ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. கஞ்சா போதைப் பொருளுடன் 199 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவர்களிடமிருந்து 2 கிலோ 550 கிராம் 43 மில்லிகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை ஐஸ் போதைப் பொருளுடனும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 10 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மதுபானம் தொடர்பில் இடம்பெற்ற சுற்றிவளைப்புகளில் 345 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களிடமிருந்து 6128 லீட்டர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருந்தமை தொடர்பில் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களிடமிருந்து கல்கட்டஸ் ரக துப்பாக்கி ஒன்று, 3 ரிபீடர் ரக துப்பாக்கிகளும், குழல் 12 ரக துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை, பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 306 சந்தேக நபர்களும், வேறுவகையான குற்றச்செயல்களை புரிந்ததாக 638 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM