ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி 3 வயது பாலகன் பலி

Published By: Priyatharshan

04 Jul, 2016 | 11:54 AM
image

ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி 3 வயதுடைய பாலகன் பரிதாபமாக பலியான சம்பவமொன்று மிஹிந்தலையில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் மிஹிந்தலை குமரசிறி கிராமத்திலுள்ள பலகனது வீட்டில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எஸ்.எம். சடீவ் நுஹாஸ் ரஸ்மிஹா தம்பதிகளின் ஒரே மகனான 3 வயது பாலகனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

உயிரிழந்த பாலகனின் தாயார் தோலுரிக்கப்பட்ட சில ரம்புட்டான் பழங்களை பாலகனுக்கு கொடுத்துள்ளனார். இந்நிலையில் அதிலொரு பழத்தின் விதை பாலகனின் தொண்டையில் சிக்கியுள்ளது.

பாலகன் மூச்சு விடுவதற்கு சிரமப்படுவதை அவதானித்த தாயார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு பாலகனை எடுத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் பாலகன் ஏற்கனவே இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனை இடம்பெற்றதையடுத்து பாலகனின் சடலம் பெற்றோரிடம் நேற்று மாலை கையளிக்கப்பட்டது.

இச் சம்பவம் தொடர்பில் மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வர்த்தகம், சந்தையை பன்முகப்படுத்தல் குறித்து ஜனாதிபதி...

2025-02-12 13:23:46
news-image

கார் - வேன் மோதி விபத்து...

2025-02-12 13:04:52
news-image

உலக அரச உச்சி மாநாட்டில் இன்று...

2025-02-12 13:10:44
news-image

யாழ்ப்பாணத்தில் மருத்துவ எரியூட்டியால் தமக்கு பாதிப்பு...

2025-02-12 13:10:15
news-image

கண்டி புகையிரத நிலைய சமிக்ஞை அறையின்...

2025-02-12 12:39:58
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மூவர் காயம்...

2025-02-12 12:03:51
news-image

பலசரக்கு வியாபார நிலையத்தில் காலாவதியான பொருட்கள்...

2025-02-12 12:31:38
news-image

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் பிரித்தானிய முன்னாள்...

2025-02-12 11:59:30
news-image

கந்தானையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-02-12 11:56:16
news-image

ஜனாதிபதிக்கும் "எதெர அபி அமைப்பு" க்கும்...

2025-02-12 12:04:55
news-image

ஆட்கடத்தலுக்கு எதிரான செயற்றிட்டம் குறித்து தாய்லாந்து...

2025-02-12 11:57:16
news-image

ஜனாதிபதிக்கும் ஜோன்ஸ் நிறுவன தலைமை நிறைவேற்று...

2025-02-12 12:04:36