தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் வெறுக்கத் தொடங்கியுள்ளனர் - அருத்தவபாலன் 

27 Jun, 2020 | 07:11 PM
image

தமிழரசுக் கட்சியின் வீட்டில் இன்று புத்தெடுத்து விச நாகங்கள் சூழ்ந்து எல்லாமே அழிந்து போகின்ற நிலையில் ஏனையவர்களை வீட்டுக்குள் கூப்பிடுவது நகைச்சுவையானது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள தனது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர்கலால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்களை மீள இணைப்பது தொடர்பாக தமிழரசு கட்சியின் தலைவர்  மாவை சேனாதிராஜா வெளியிட்ட கருத்து தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே க.அருத்தவபாலன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அருந்தவபாலன் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் காலத்தில் பல ஏமாற்றுக் கதைகளை கூறுவது தெரியும். ஒரு வகையில் அந்த வீட்டுக்குள் அவர்களுடன் நெருக்கமாக பழகியவன் என்ற அடிப்படையில் எனக்கு கூடுதலாகவே தெரியும்.

எனவே இது கூட ஒரு தேர்தல்கால குண்டுதான். அடிக்கடி திரு மாவை சேனாதிராஜா குண்டுகள் போடுவார் அந்த வகையாக ஒரு தேர்தல் குண்டாகவே இதனை கருதுகின்றோம்.

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொதுவாக மக்கள் வெறுக்க தொடங்கியிருக்கின்றார்கள். அதற்கு ஆதரவளித்த மக்கள் பெரும்பாலும் அதிலிருந்து வெளியேறி மாற்று அணியாக நீதியரசன் விக்னேஸ்வரன் அணியை தெரிவு செய்து எங்களுக்கு ஆதரவை தந்து ஆதரவு பெருகிக்கொண்டிருக்கின்றது.

இந்த ஒரு வேளையில் சென்றவர்களை மீழ இணைப்போம் என்று சொல்வதையெல்லாம் அதாவது அவர்களுடைய அந்த வீடு என்பது இன்று புத்தெடுத்து விச நாகங்கள் சூழ்ந்து எல்லாமே அழிந்து போகின்ற ஒரு நிலையில் ஏனையவர்களை அந்த வீட்டுக்கு கூப்பிடுவதென்பது மிகவும் நகைச்சுவையான ஒன்று.

இந்த தேர்தலுடன் அவர்கள் மக்களுடைய அரசியலில் இருந்து அகற்றப்படுவார்கள் என நாங்கள் கருதுகின்றோம் என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56